#IPL2022: பவர் பிளே ஓவரில் 3 விக்கெட்களை இழந்த மும்பை.. சென்னை அணிக்கு 156 ரன்கள் இலக்கு!

Default Image

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற 156 ரன்கள் இலக்கு.

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 33-வது போட்டியில் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி மோதி வருகிறது. DY பட்டில் மைதானத்தில் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா – இஷான் கிஷன் களமிறங்கினார்கள்.

இதில் 2-ம் பந்திலே ஒரு ரன் கூட எடுக்காமல் ரோஹித் ஷர்மா தனது விக்கெட்டை இழக்க, தேவால்டு களமிறங்கினார். பின்னர் இஷான் கிஷன், டக் அவுட் ஆக, பின்னர் சூரியகுமார் யாதவ் களமிறங்கி அதிரடியாக ஆடத் தொடங்கினார். 4 ரன்கள் அடித்த தேவால்டு தனது விக்கெட்டை இழந்தார். இதன்மூலம் பவர் பிளே ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி, 3 விக்கெட்கள் இழப்பிற்கு 42 ரன்கள் எடுத்தது.

சிறப்பாக ஆடிவந்த சூரியகுமார் யாதவ் 32 ரன்கள் எடுத்து வெளியேற, அவரையடுத்து திலக் வர்மா களமிறங்கினார். அவருடன் க்ரித்திக் ஷோகீனுடன் இணைத்தார். 25 ரன்கள் எடுத்து அவர் வெளியேற, பின்னர் களமிறங்கிய பொல்லார்ட் 14 ரன்கள் எடுத்தும், டேனியல் சம்ஸ் 5 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள். இறுதியாக மும்பை அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது சென்னை சூப்பர் அணி பேட்டிங் செய்து வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war
Chief Minister J&K
Jammu Kashmir
scattered missile parts