தடுமாறிய மும்பை..! பஞ்சாபிற்கு 132 ரன் இலக்கு..!

Published by
murugan

மும்பை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் எடுத்தனர்.

இன்று ஐபிஎல் தொடரின் 17 வது லீக் போட்டியில்   நடைபெறுகிறது. இந்த போட்டியில் மும்பை அணியும், பஞ்சாப் அணியும் சென்னை சேப்பாக் மைதானத்தில் மோதி வருகிறது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தனர்.

இதைத்தொடர்ந்து,மும்பை அணியில் தொடக்க வீரராக குயின்டன் டி கோக் , ரோஹித் சர்மா இருவரும் களமிறங்கினார். ஆனால் ஆட்டம் தொடக்கத்திலேயே குயின்டன் டி கோக் 3  ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய இஷான் கிஷன் 6 ரன்களில் வெளியேற மும்பை அணி 26 அணி 2 விக்கெட்டை பறிகொடுத்து இருந்தது. இதைத்தொடர்ந்து களமிறங்கிய  பின்னர் சூர்யகுமார் யாதவ், ரோஹித் சர்மா உடன் கூட்டணி அமைத்து அணியின் எண்ணிக்கையை சற்று உயர்த்தினர்.

அதிரடியாக விளையாடி வந்த ரோகித் சர்மா அரைசதம் விளாசினார். சிறப்பாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 33 ரன்னில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்த சில நிமிடங்களில் ரோகித் சர்மா 63 தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். பின்னர் களமிறங்கிய ஹார்திக் பாண்டியா 1,  க்ருனல் பாண்டியா 3 ரன்கள் எடுத்து வெளியேறினர்.

இறுதியாக மும்பை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் எடுத்தனர். 132 ரன்கள் இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கவுள்ளது.

Published by
murugan

Recent Posts

முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி.! இந்திய அணி தோல்விக்கு காரணம் என்ன.?

முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி.! இந்திய அணி தோல்விக்கு காரணம் என்ன.?

லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. தொடக்க வீரர்கள் ஜாக் கிராவ்லி (65) மற்றும்…

10 minutes ago

ஜெய்ஷ்வால் எத்தனை முறை கேட்ச் விடுவ? செம கடுப்பான கம்பீர்..கில்!

லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…

10 hours ago

ஈரானில் தமிழக மீனவர்கள் – மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…

11 hours ago

INDvsENG : நீங்க நிறுத்திக்கோங்க நான் ஆடுறேன்! போட்டியின் நடுவே விளையாடிய மழை!

லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…

12 hours ago

ஈரான் தொடங்கினாலும் இஸ்ரேல் அமைதியா இருந்திருக்கணும்! டிரம்ப் அதிருப்தி!

வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…

12 hours ago

போதைப் பொருள் வழக்கு : ஸ்ரீகாந்த் கைது..அடுத்து கிருஷ்ணாவுக்கு சம்மன்?

சென்னை :  நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…

13 hours ago