49 ரன் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி ..!

Published by
murugan

இன்று ஐபிஎல் டி20 தொடரின் 5-வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் மோதியது. இப்போட்டி ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் இறங்கிய மும்பை அணியில்  சூர்யகுமார் அரைசதம் அடிக்காமல் 47 ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்னர் அதிரடியாக விளையாடிய ரோஹித் 80 ரன்கள் குவித்தார். இறுதியாக மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 195 ரன்கள் எடுத்தனர்.

196 ரன்கள் இலக்குடன் கொல்கத்தா அணியில் தொடக்க வீரர்களாக சுனில் நரைன், சுப்மான் கில் இருவரும் களமிறங்கினர். சில நிமிடங்களில் சுப்மான் கில் 7 ரன்னில் வெளியேறினர். பின்னர், சுனில் நரைனும் 9 ரன்னில் தனது விக்கெட்டை இழந்தார்.

அடுத்து இறங்கிய தினேஷ் கார்த்திக் , ராணா இருவரும் அணியின் எண்ணிக்கை சற்று உயர்த்தினார். நிதானமாக விளையாடி வந்த தினேஷ் கார்த்திக்30 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்த ஓவரிலே ராணாவும் 24 ரன்னில் விக்கெட்டை இழக்க அடுத்து களம் கண்ட மோர்கன் 16  , ரஸ்ஸல் 11 ரன்களில்  விக்கெட்டை இழக்க கடைசியில்  இறங்கிய  கம்மின்ஸ் 33 ரன்கள் விளாசினார்.

இறுதியாக கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 146 ரன்கள் எடுத்து 49 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

Published by
murugan
Tags: IPL2020

Recent Posts

திருவள்ளூர் ரயில் விபத்து: ரயில் சேவையில் மாற்றம் – தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.!

திருவள்ளூர் ரயில் விபத்து: ரயில் சேவையில் மாற்றம் – தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.!

சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…

8 hours ago

2 ஆவது விக்கெட்டை வீழ்த்தி சிராஜ் அசத்தல்! இங்கிலாந்து அணி கதறல்!

லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…

8 hours ago

இயக்குநர் பா.ரஞ்சித் படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழப்பு.!

சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…

8 hours ago

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு!

சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…

9 hours ago

புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் தற்கொலை.! நடந்தது என்ன.?

உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

9 hours ago

பாலியல் வன்கொடுமை.., பொதுவெளியில் தண்டனை அளித்த ஈரான் அரசு.!

புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…

10 hours ago