ரிக்கி பாண்டிங் இருப்பதால் என்னுடைய கேப்டன்சி சிறப்பாக இருக்கிறது என்று டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு செய்தது அதன் படி, முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்தனர். 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 19. 1 ஓவர்களில் 138 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசியத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியை தொடர்ந்து டெல்லி அணி புள்ளிவிவரப்பட்டியலில் 2 வது இடத்திற்கு சென்றது. இந்த நிலையில், போட்டி முடிந்தவுடன் பேசிய டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் கூறியது ” என்னுடைய கேப்டன்சி பணியை நான் சிறப்பாக செய்வதாக உணர்கிறேன். அணியில் பிற மூத்த வீரர்கள் இருப்பது எனக்கு அணியை வழிநடத்த பெரிதும் உதவியது. என்னுடைய கேப்டன்சி ரிக்கி பாண்டிங் இருப்பதால் சிறப்பாக இருக்கிறது. ஒரு விக்கெட் கீப்பராக நான் விளையாட்டைப் படித்துக்கொண்டே இருக்கிறேன். கொரோனா காலகட்டத்தில் கிரிக்கெட் விளையாடுவது ஒரு சவலாகத்தான் இருக்கிறது, ஆனால் ஒரு அணியாக இப்போது நாங்கள் அணிக்கு வெளிய நடப்பது குறித்து யோசிக்கவில்லை. பிசிசிஐ எங்களை மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்கிறது அதனால் கிரிக்கெட்டை பற்றி மட்டுமே யோசிக்கிறோம்” என்றும் ரிஷப் பண்ட் கூறியுள்ளார்.
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…