நேற்று முன்தினம் பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடந்த போட்டியில் இங்கிலாந்து அணியும் , இந்திய அணி மோதியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து முதலில் களமிறங்கி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 337 ரன்கள் அடித்தனர்.
பின்னர் 338 ரன்கள் இலக்குடன் இந்திய அணி யின் தொடக்க வீரர்களான ரோஹித் , கே .எல் ராகுல் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலே கே .எல் ராகுல் ரன்கள் எடுக்கலாம் வெளியேறினார்.
பின்னர் கேப்டன் கோலி களமிறங்கினர்.இப்போட்டியில் கோலி நிதானமாக விளையாடி 76 பந்தில் 66 ரன்கள்எடுத்து அவுட் ஆனார்.இந்நிலையில் இந்திய அணி நடப்பு உலகக் கோப்பையில் விளையாடிய ஆறு போட்டிகளில் ஐந்து போட்டிகளில் கோலி அரைசதத்திற்கு மேல் அடித்து உள்ளார்.
இதன் மூலம் உலகக்கோப்பையில் தொடர்ந்து ஐந்து போட்டிகளில் அரைசதத்திற்கு மேல் அடித்த வீரர்களில் கோலி முதலிடத்தை பிடித்து உள்ளார்.கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் மற்றும் நவ்ஜோத் சிங் இவர்கள் இருவருமே 4 போட்டிகளில் தொடர்ந்து அரைசதம் அடித்து இருந்தனர்.தற்போது இவர்கள் இருவரின் சாதனையையும் விராட் கோலி முறியடித்து உள்ளார்.
கோலி – 5 (2019) *
நவ்ஜோத் சிங் – 4 (1987)
சச்சின் – 4 (1996)
சச்சின் – 4 (2003)
ரோஹித் – 3 (2019)
டிராவிட் – 3 (1999)
யுவராஜ் – 3 (2011)
அசார் – 3 (1992)
கவாஸ்கர் – 3 (1987)
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…