ஜெய் ஷாக்கு புதிய பதவியா?- நாளை கூடுகிறது பிசிசிஐ-யின் 89-வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம்.!

Published by
பாலா கலியமூர்த்தி

பிசிசிஐ அமைப்பின் 89-வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் நாளை கூடுகிறது. குழு தலைவர்களைத் தேர்வு செய்வது உள்ளிட்ட பல்வேறு முடிவுகளை எடுக்க உள்ளதாக தகவல் கூறப்படுகிறது.

பிசிசிஐ அமைப்பின் 89-வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் நாளை கூடுகிறது. இந்த கூட்டத்தில், ஐபிஎல் டி-20 தொடரில் அடுத்த ஆண்டில் 2 புதிய அணிகளைச் சேர்ப்பது, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மகனுக்குப் புதிய பதவி வழங்குவது, தேர்வுக் குழு தலைவர்களைத் தேர்வு செய்வது உள்ளிட்ட பல்வேறு முடிவுகளை எடுக்க உள்ளதாக தகவல் கூறப்படுகிறது.

பிசிசிஐ துணைத் தலைவராக ராஜீவ் சுக்லா நாளை நடக்கும் பொதுக்குழுக் கூட்டத்தில் அதிகாரபூர்வமாக பதவி ஏற்க உள்ளார். ஐபிஎல் நிர்வாகக் கவுன்சில் தலைவராக பிரிஜேஸ் படேல் தொடருவார் என்று கூறப்படுகிறது. மேலும், பிசிசிஐ தலைவராக இருக்கும் கங்குலி பல்வேறு விளம்பரங்களில் நடித்து வருவதால் அவரிடம் முறையாக விளக்கம் கேட்கவுள்ளனர்.

குறிப்பாக, தற்போது 8 அணிகள் ஐபிஎல் தொடரில் இருக்கும் நிலையில் 2021-ம் ஆண்டில் நடக்கும் ஐபிஎல் தொடரில் 10 அணிகளாக உயர்த்துவது தொடர்பாக முக்கிய ஆலோசனை நாளை நடக்கும் என எதிரிபார்க்கப்படுகிறது. அதில், அதானி குழுமம் மற்றும் சஞ்சீவ் கோயங்கா (ரைஸிங் புனே சூப்பர் ஜெயிட்ன்ஸ்) குழுமம் ஆகிய இரு புதிய அணிகளும் ஐபிஎல் தொடரில் இணைய ஆர்வமாக உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், 2021-ஆம் ஆண்டுக்கு தான் 10 அணிகள் சேர்ப்பது என தகவல் தெரிவிக்கப்படுகிறது.

2021-ம் ஆண்டில் இந்தியாவில் டி20 உலகக் கோப்பைப் போட்டி நடக்கயிருப்பதால், ஐசிசி அமைப்புக்கு வரிவிலக்கு அளிக்கக் கோரி பிசிசிஐ அமைப்பிடம் கோரி இருந்தது. அந்த அவகாசம் முடிய இன்னும் ஒருவாரம் மட்டுமே இருப்பதால், இதுகுறித்தும் ஆலோசிக்கப்படும். நாளை கூட்டத்தில் பிசிசிஐ செயலாளரும் அமித் ஷா மகனுமான ஜெய் ஷா தேர்வு செய்யப்படலாம் எனத் தெரிகிறது. பின்னர் முக்கிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படலாம்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

போலீஸ் அடித்ததில் அஜித்துக்கு சிறுநீரில் ரத்தம் வந்தது” நேரில் பார்த்தவர் சொன்ன அதிர்ச்சி தகவல்!

போலீஸ் அடித்ததில் அஜித்துக்கு சிறுநீரில் ரத்தம் வந்தது” நேரில் பார்த்தவர் சொன்ன அதிர்ச்சி தகவல்!

சிவகங்கை :மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு…

20 minutes ago

அடிப்பதற்கு காவல்துறை எதற்கு? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு சரமாரி கேள்வி!

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை…

1 hour ago

உங்களுடைய வெற்றியை பார்த்து தந்தை போல் நானும் மகிழ்ச்சி அடைகிறேன் – முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் 'வெற்றி நிச்சயம்' என்ற புதிய திட்டத்தைத் தொடங்கி…

2 hours ago

சலுகைகள் இல்லைனா தென்னாப்பிரிக்காவுக்கே போயிருப்பார்…மஸ்கை கிண்டல் செய்த ட்ரம்ப்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தொழிலதிபர் எலான் மஸ்க்கை கடுமையாக விமர்சித்து, அவர் அரசாங்கத்தின் மானியங்கள் மற்றும்…

2 hours ago

சொல்லியும் கேட்காத சின்னச்சாமி நிர்வாகம்…மைதானத்தின் Fuseஐ பிடுங்கிய EB!

பெங்களூர்: பெங்களூரின் எம். சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தில் தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்துமாறு பெங்களூர் மின்சார விநியோக…

3 hours ago

காவல் மரண வழக்குகளின் தற்போதைய நிலை என்ன? த.வெ.க தலைவர் விஜய் கேள்வி!

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27) நகை…

4 hours ago