இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுவதற்காக சென்று உள்ளது.அதன்படி இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டி -20 போட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார்.அதன்படி நியூசிலாந்து அணி முதலில் தனது பேட்டிங்கை தொடங்கியது.தொடக்க ஆட்டக்காரர்களாக கப்டில் மற்றும் முன்ரோ ஆகியோர் களமிறங்கினார்கள்.இந்த ஜோடி நியூசிலாந்து அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தது.இந்த சமயத்தில் கப்தில் 30 ரன்களில் வெளியேறினார்.பின்பு வில்லியம்சன் களமிறங்கிய சிறிது நேரத்தில் முன்ரோ 59 ரன்களுடன் தாகூர் பந்துவீச்சில் வெளியேறினார். இவருக்கு அடுத்தபடியாக களமிறங்கிய கிராண்ட் ஹோம் ரன் எதுவும் எடுக்காமல் ஜடேஜா பந்துவீச்சில் துபே விடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.இதே சமயத்தில் வில்லியம்சனும் சாகல் பந்துவீச்சில் கோலியிடம் கேட்ச் கொடுத்து 51 ரன்னில் வெளியேறினார்.பின்னர் இறுதியில் வந்த ராஸ் டெய்லர் வந்தது முதல் அதிரடியாக விளையாடி அணியின் ரன்னை உயர்த்தினார்.ஒரு முனையில் இவர் ரன்னை உயர்த்த மறுமுனையில் டிம் 1 ரன்னில் வெளியேறினார்.
இறுதியாக நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்கள் அடித்துள்ளது.களத்தில் டெய்லர் 54*,சட்னர் 2 * ரன்களுடன் இருந்தனர். இந்திய அணியின் பந்துவீச்சில் பூம்ரா ,தாகூர்,சாகல்,துபே ,ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினார்கள்.இதனையடுத்து 204 ரன்கள் அடித்தால் வென்றி என்ற இமாலய இலக்குடன் இந்திய அணி களமிறங்கவுள்ளது.
ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…
அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…
சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…
சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…