எனக்கு பந்து வீசுவீர்களா? கேப்டனின் வேண்டுகோளை ஏற்க மறுத்த நியூஸிலாந்து வீரர்.. இதுதான் காரணம்!

Published by
Surya

பெங்களூர் அணியின் கேப்டன் கோலி, டியுக் பந்துகளை தனக்கு போடுவீர்களா? என்று நியூஸிலாந்து அணியின் ஜேமிசனிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர், வாய்ப்பே இல்லை என்று ஒரே வார்த்தையில் கூறியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணியில் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிசன் இடம் பிடித்துள்ளார். அவரை அந்த அணி, 15 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் அதற்கேற்றாப்போல சிறப்பாக ஆடிவருகிறார். இந்த ஐபிஎல் தொடர் முடிவடைந்தப்பின், இந்தியா – நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது.

இந்த போட்டியில் டியுக் பந்து பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், பெங்களூர் அணி வீரர்கள் ஐபிஎல் தொடரில் பயிற்சி மேற்கொண்டபோது கேப்டன் கோலி, டியுக் பந்துகளை தனக்கு போடுவீர்களா? என்று கேட்டுள்ளார். அதற்கு நியூஸிலாந்து அணியின் ஜேமிசன், வாய்ப்பே இல்லை என்று ஒரே வார்த்தையில் கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து பெங்களூர் அணியின் ஆல்-ரவுண்டர் டேன் கிறிஸ்டியன் கூறியதாவது, நாங்கள் நெட் பயிற்சிக்கு தயாராகி கொண்டிருந்தபோது கோலி, ஜேமிசன் டெஸ்ட் போட்டி பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது,

கோலி: ஜேமிசன், நீங்கள். டியுக் பந்தில் அதிகமாக பந்து வீசினீர்களா? (மேலும் பந்து குறித்து பேசிக் கொண்டனர்).

ஜேமிசன்: ஆம்.. நான் ஒன்றிரண்டு பந்துகள் கொண்டு வந்துள்ளேன். டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு இங்கிலாந்து செல்லும் முன் இங்கு பயிற்சி மேற்கொள்வேன்.

கோலி: அப்படியா.. வலைப்பயிற்சியில் எனக்கு பந்து வீச விரும்புவீர்களா? நான் உங்கள் பந்தை எதிர்கொள்ள மிகவும் மகிழ்ச்சியடைவேன்!

ஜேமிசன்: உங்களுக்கு நான் பவுலிங் செய்ய வாய்ப்பே இல்லை.. நான் பந்தை ரிலீஸ் செய்யும் இடத்தை நீங்கள் கவனித்து விடுவீர்கள். அதன்பின் எல்லாவற்றையும் டியுக் பந்தில் செய்து விடுவீர்கள். என்று பேசியதாக கிறிஸ்டியன் தெரிவித்தார்.

Published by
Surya

Recent Posts

ஆபரேஷன் சிந்தூர் : 80 பயங்கரவாதிகள் உயிரிழப்பு! பழிதீர்த்த இந்திய ராணுவம்! 

ஆபரேஷன் சிந்தூர் : 80 பயங்கரவாதிகள் உயிரிழப்பு! பழிதீர்த்த இந்திய ராணுவம்!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…

4 minutes ago

” இது இந்தியாவின் போர் நடவடிக்கை! தக்க பதிலடி கொடுக்கப்படும்!” பாகிஸ்தான் கடும் கண்டனம்!

இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…

1 hour ago

ஆபரேஷன் சிந்தூர்., 9 இடங்களில் அட்டாக்! பஹல்காம் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…

2 hours ago

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…

9 hours ago

“நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்” – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…

10 hours ago

MI vs GT : குஜராத் அணியின் மிரட்டல் பவுலிங்.., திணறிய மும்பை.!! இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…

12 hours ago