abhishek sharma [File Image]
அபிஷேக் சர்மா : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய அபிஷேக் சர்மா இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். அதன்படி தற்போது, ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட முதல் 3டி2- போட்டியில் விளையாட அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. முதல் போட்டியில் அபிஷேக் சர்மா டக்-அவுட் ஆன நிலையில், இரண்டாவது போட்டியில் அதிரடியாக விளையாடி சதம் விளாசி அசத்தினார்.
வெறும் 46 பந்துக்கு 100 ரன்கள் எடுத்து அசத்தினார், அதில் 8 சிக்ஸர்களும், 7 பவுண்டரிகளும் அடங்கும். இவருடைய அதிரடியான ஆட்டத்தை பார்த்து ரசிகர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் இந்தியாவின் எதிர்காலம் என புகழ்ந்து வருகிறார்கள். இந்த சூழலில், அவருடைய தந்தை ராஜ்குமார் எப்போதும் பேட்டிங் ஸ்டைலை அபிஷேக் சர்மா மாற்றவே கூடாது என அவருக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார்.
சிக்ஸர் அடிக்க சென்று அவுட் ஆகிவிட்டோம் கொஞ்சம் பொறுமையாக விளையாடவேண்டும் என்று அவருக்கு எண்ணம் வந்து இருப்பதாக நான் நினைக்கிறன். நான் அவருக்கு சொல்லும் ஒரு விஷயம் என்னவென்றால் அவருடைய ஸ்டைல் சிக்ஸர்கள் விளாசுவது தான். எனவே, அதனை மாற்றிக்கொள்ளாமல் தைரியமாக விளையாடினாள் போதும். அவருடைய சிக்ஸர் அடிக்கும் திறமைதான் இங்கு வருவதற்கு உதவியிருக்கிறது என்பதை நினைவுபடுத்தினேன்.
எனவே, அந்த திறமையை எப்போதும் விட்டுவிடாமல் விளையாடவேண்டும். என்ன நடந்தாலும் அதை மட்டும் மாற்றக்கூடாது என்பது தான் என்னுடைய ஆசை. வரும் போட்டிகளும் அவர் இன்னும் சிறப்பாக விளையாடுவார் என்று நான் நினைக்கிறன்” எனவும் அபிஷேக் சர்மாவின் தந்தை ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…