ஒரே போட்டி ..பல சாதனைகள் காலி!! டி20னா இப்படி இருக்கணும் !!

Published by
அகில் R

IPL 2024 : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி இமாலய இலக்கை சேஸ் செய்து பல சாதனைகளை முறியடித்துள்ளது.

ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியாக கொல்கத்தா நைட் ரரைடர்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் விளையாடிய கொல்கத்தா அணி அதிரடியாக விளையாடி 20 ஓவர்களில் 261 ரன்கள் குவித்தனர். இதை தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணி கொல்கத்தா அணியை விட அதிரடியாக விளையாடி 18.2 ஓவர்களில் இந்த இமாலய இலக்கை அடித்து சாதனை படைத்தனர்.

இதன் மூலம் பல சாதனைகளை இந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியினர் முறியடித்துள்ளனர். அது என்னென்ன என்று நாம் தற்போது பார்க்கலாம். ஐபிஎல் தொடர் மற்றும் டி20 போட்டிகளிலும் அதிக ரன்களை சேசிங் செய்து தென் ஆப்ரிக்காவின் அதிகபட்ச சேசிங் சாதனையை முறியடித்தது பஞ்சாப் அணி.

மேலும், ஒரு டி20 போட்டியில் இரண்டு அணிகளும் சேர்ந்து அதிக ரன்களை இதற்கு முன், இதே ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணியும் பெங்களூரு அணியும் மோதிய போட்டியில் 549 ரன்கள் எடுத்தனர். அதன் பிறகு 2-வதாக ஹைதராபாத் மும்பை அணிகள் இதே ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில் சேர்ந்து 523 ரன்கள் குவித்தனர்.

நேற்றைய போட்டியில் கொல்கத்தா அணி 261 ரன்கள் சேர்த்தனர் அதன் பிறகு பஞ்சாப் அணியின் 262 என இரண்டு அணிகளின் ஸ்கோரையும் கூட்டினால் 523 என்ற ஸ்கோர் வரும் இது 2-வதாக அந்த பட்டியலில் உள்ள ஹைதராபாத் மும்பை அணிகள் செய்த சாதனையை சமன் செய்துள்ளனர். மேலும், ஒரு டி20 போட்டியில், ஒரு இன்னிங்சில் அதிக சிக்ஸர்கள் அடித்த அணியாக பஞ்சாப் அணி முதலிடத்தில் உள்ளது.

பஞ்சாப் அணி நேற்றைய போட்டியில் அவரகளது இன்னிங்சில் மொத்தம் 24 சிக்ஸர்கள் அடித்துள்ளனர். மேலும், கொல்கத்தா மற்றும் பஞ்சாப் இரு அணிகளும் சேர்ந்து நேற்றைய போட்டியில் 42 சிக்ஸர்கள் அடித்துள்ளனர். வெறும் சிக்ஸர்களால் மட்டும் 252 ரன்களை இந்த இரு அணிகளும் நேற்றைய போட்டியில் குவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
அகில் R

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

15 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

16 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

16 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

17 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

17 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

19 hours ago