ஐபிஎல் தொடரில் கடந்த 28-ம் தேதி நடைபெற்ற சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணியின் கேப்டன் வார்னர் அணிந்த ஷூ, சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் தொடரில் கடந்த 28-ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதியது. டெல்லி நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, 3 விக்கெட் இழப்புக்கு 171 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக மனிஷ் பாண்டே 61 ரன்களும், டேவிட் வார்னர் 57 ரன்களும் அடித்தனர். அதனைதொடர்ந்து பேட்டிங் செய்த சென்னை அணி, 18.3 ஓவர்களில் 173 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பெற்றுள்ளது.
இந்த ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் அணிந்திருந்த ஷூ, தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த ஷூவில் அவரது மனைவி மற்றும் குழந்தைகளின் பெயர் பதிக்கப்பட்டு இருந்தது. இதனை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வார்னரின் மனைவி பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர், “இந்த உலகில் எங்கிருந்தாலும், நாங்கள் எப்போது உங்களுடனே இருப்போம்” என்று தனது கருத்தை பதிவிட்டுள்ளார். இந்த பதிவு, தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரும் நிலையில், தான் ஒரு சிறந்த கணவர் மற்றும் அப்பா என்பதை வார்னர் நிரூபித்துள்ளார்.
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…
விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…
சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…
சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…