புஜாரா மற்றும் பண்ட் இருவரும் சிறப்பான ஆட்டத்தால் அரைசதம் விளாசினார்.
இங்கிலாந்து, இந்தியா அணிகளுகு இடையே முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் இறங்கிய இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டையும் இழந்து முதல் இன்னிங்ஸில் 578 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் பும்ரா, அஸ்வின் தலா 3 விக்கெட்டும், ஷாபாஸ் நதீம், இஷாந்த் சர்மா தலா 2 விக்கெட்டை பறித்தனர்.
இதைத்தொடர்ந்து, இந்திய அணியின் தொடங்க வீரர்களாக ரோஹித், சுப்மான் கில் இருவரும் இறங்கினர். ஆனால் இருவரும் நிலைத்து நிற்கவில்லை சுப்மான் கில் 29, ரோஹித் 6 ரன்களுடன் வெளியேறினார். பின்னர், இறங்கிய துணை கேப்டன் ரஹானே 1 , கேப்டன் கோலி 11 ரன்கள் எடுத்து பெவிலியன் திருப்பினார்.
இதனால், இந்திய அணி பரிதாபமான நிலை இருந்தபோது, புஜாரா மற்றும் பண்ட் இருவரும் சிறப்பான ஆட்டத்தால் அணியின் எண்ணிக்கை சற்று உயர்ந்தது. அதிரடியாக விளையாடி வரும் இருவரும் அரைசதம் விளாசினார். பண்ட் 54 பந்தில் 63* ரன்கள் எடுத்த்துள்ளார். அதில், 6 பவுண்டரி , 4 சிக்ஸர் அடங்கும். டெஸ்ட் போட்டியில் பண்ட்டின் இது 5-வது அரைசதமாகும்.
புஜாரா 117 பந்தில் 57* ரன்கள் எடுத்துள்ளார். அதில் 8 பவுண்டரி அடங்கும். டெஸ்ட் போட்டியில் புஜாராவின் இது 29-வது அரைசதமாகும். இங்கிலாந்து அணியில் டொமினிக் பெஸ், ஆர்ச்சர் தலா 2 விக்கெட்டை பறித்தனர். இந்திய அணி தற்போது 4 விக்கெட்டை இழந்து 171 ரன்கள் எடுத்துள்ளது.
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 – ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…
மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா, தனது கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியாக, மும்பை கிரிக்கெட்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு (NCB) காவல்துறையினரால் கைது…
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 - ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…