#IPL2021: “சென்னை அணியை பாத்து கத்துக்கோங்க”- பஞ்சாப் அணிக்கு சேவாக் அறிவுரை!

Published by
Surya

சென்னை அணியில் ஒவ்வொரு வீரரும் 20-30 ரன்கள் அடித்து ஸ்கோரை உயர்த்துகிறார்கள். இதேபோலத்தான் பஞ்சாப் அணியும் செயல்பட வேண்டும் என்று சேவாக் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. அஹமதாபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 9 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் மட்டுமே அடித்தது. அதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி, 16.4 ஓவர்களில் 125 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றுள்ளது.

பஞ்சாப் அணியில் கே.எல்.ராகுல், கிறிஸ் கெய்ல், பூரன் போன்ற அதிரடி ஆட்டக்காரர்கள் இருந்தும் வெறும் 123 ரன்கள் மட்டும் அடித்ததை ரசிகர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர். அந்தவகையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேவாக், பஞ்சாப் அணியின் பேட்டிங் வரிசை மிகவும் மோசமாக இருப்பதாக கூறினார்.

இதுகுறித்து பேசிய அவர், “பந்துவீச்சில் பலமாக இருக்கும் பஞ்சாப் அணி, அதிரடி வீரர்கள் இருந்தும் பேட்டிங் வரிசையில் சிறப்பானதாக இல்லை. மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பான செயல்பட்டனர். ஆனால், பேட்டிங் வரிசை கவலைக்கிடமான நிலையில் இருக்கிறது. இதனால் கிறிஸ் கெய்ல், நிகோலஸ் பூரன் உள்ளிட்டஅதிரடி ஆட்டக்காரர்கள், நெருக்கடியுடன் விளையாடுகிறார்கள். இவர்களைச் சுதந்திரமாக விளையாட அனுமதித்தால்தான் ரன்களை குவிக்க முடியும்.

மேலும், துவக்க வீரர்கள் நிதானமாக விளையாடுவதுதான் மற்ற பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்துகிறது. அந்தவகையில், சென்னை அணியில் பேட்டிங் வரிசை சிறப்பானதாக இருக்கிறது. ஒவ்வொரு வீரரும் 20-30 ரன்கள் அடித்து ஸ்கோரை உயர்த்துகிறார்கள். இதேபோலத்தான் பஞ்சாப் அணியும் செயல்பட வேண்டும். ஒரே ஒரு வீரரை மட்டும் நம்பியிருக்க கூடாது.

நாம் நிதனமாக விளையாடி பவர் பிளேவில் விக்கெட்டை கொடுக்கவில்லை என்றால், அடுத்து கெய்ல், பூரன் போன்றவர்கள் அதிரடி காட்டுவார்கள் என நம்புகிறார்கள். தொடக்க ஆட்டக்காரர்கள் நிதானமாக விளையாடுவதால், மற்ற வீரர்களுக்கு நெருக்கடி ஏற்படும் என்பதை பஞ்சாப் அணி உணர வேண்டும்” என்று கூறினார். அதுமட்டுமின்றி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை போல் செயல்படக் கற்றுக்கொள்ளுங்கள் என்று சேவாக் அறிவுரை வழங்கியுள்ளார்.

Published by
Surya

Recent Posts

ஜெய்ஷ்வால் எத்தனை முறை கேட்ச் விடுவ? செம கடுப்பான கம்பீர்..கில்!

ஜெய்ஷ்வால் எத்தனை முறை கேட்ச் விடுவ? செம கடுப்பான கம்பீர்..கில்!

லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…

6 hours ago

ஈரானில் தமிழக மீனவர்கள் – மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…

7 hours ago

INDvsENG : நீங்க நிறுத்திக்கோங்க நான் ஆடுறேன்! போட்டியின் நடுவே விளையாடிய மழை!

லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…

8 hours ago

ஈரான் தொடங்கினாலும் இஸ்ரேல் அமைதியா இருந்திருக்கணும்! டிரம்ப் அதிருப்தி!

வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…

8 hours ago

போதைப் பொருள் வழக்கு : ஸ்ரீகாந்த் கைது..அடுத்து கிருஷ்ணாவுக்கு சம்மன்?

சென்னை :  நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…

9 hours ago

எங்களுக்கு ஜடேஜா தான் தொல்லையா இருப்பாரு! இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பேச்சு!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…

9 hours ago