இங்கிலாந்து அணிக்கு எதிராக நாளை தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் களமிறங்குவார் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி முதலில் 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. முதல் போட்டி வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி நாளை தொடங்கி பிப்ரவரி 5 முதல் 9 ஆம் தேதி வரையிலும், 2வது டெஸ்ட் போட்டி, பிப்ரவரி 13 முதல் 17 ஆம் தேதி வரை சென்னை சேப்பாக்க மைதானத்தில் நடைபெறவுள்ளது. மீதமுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகள் குஜராத், அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது.
முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளை விளையாட சென்னை வந்துள்ள இந்திய அணி தனிமைப்படுத்துதலை முடித்து, தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய விராட் கோலி, இங்கிலாந்து அணிக்கு எதிராக நாளை தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் இடம்பெறுவார். ரஹானே பல்வேறு யோசனைகளை அணிக்கு வழங்குவார். நானும், ரஹானேவும் ஒருவரை ஒருவர் மதிக்கின்றோம். அணியில் அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம். வெற்றி பெற வேண்டும் என்பதில் மட்டுமே எண்ணம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனிடையே, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியை காண 50 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அகமதாபாத்தில் நடைபெறும் 3,4வது டெஸ்ட் போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லண்டன் : ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம்…
விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…