ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் 16 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களுர் அணி வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் 3-ம் இடத்திற்கு பெங்களூர் அணி முன்னேறியுள்ளது.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி 20 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்துள்ளது. 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ப்ரித்வி ஷா – டேவிட் வார்னர் களமிறங்கினார்கள்.
இதில் ப்ரித்வி ஷா 16 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழக்க, மிட்செல் மார்ஷ் களமிறங்கினர். மறுமுனையில் டேவிட் வார்னர் வெளுத்து வாங்க, 66 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார். 14 ரன்கள் எடுத்து மிட்செல் மார்ஷ் வெளியேறினார். அவரைதொடர்ந்து களமிறங்கிய ரிசப் பந்த் சிறப்பாக ஆட, மறுமுனையில் களமிறங்கிய அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள்.
இறுதியாக டெல்லி அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்து 16 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களுர் அணி வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் 3-ம் இடத்திற்கு பெங்களூர் அணி முன்னேறியுள்ளது. அதேபோல டெல்லி அணி, 8-ம் இடத்திற்கு பின்னேறியது.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…
சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…