ரிடெயினை 8 வீரராக உயர்த்த வேண்டும் ..!! பிசிசிஐக்கு வேண்டுகோள் விடுக்கும் ஐபிஎல் அணிகள் ..!

Published by
அகில் R

IPL Auction : அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு மெகா ஏலம் நடைபெற இருக்கும் நிலையில் ரிடெயின் செய்யும் வீரர்களை அதிகரிக்க வேண்டும் பிசிசிஐக்கு சில ஐபிஎல் அணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஐபிஎல் தொடர் நடைபெறுவதற்கு முன் அதற்கான மினி ஏலம், மெகா ஏலம், டிரேடிங் போன்ற நிகழ்வுகளின் படி அணியில் வீரர்களை எடுப்பார்கள். அதிலும் மெகா ஏலம் என்றால் அந்த ஆண்டின் ஐபிஎல் ஏலம் மிகவும் பரபரப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடருக்கு அப்படி பட்ட மெகா ஏலம் இந்த வருடத்தின் கடைசியில் நடைபெற உள்ளது.

கடந்த 2022 ம் ஆண்டு நடந்த மெகா ஏலத்தில் ஒரு ஐபிஎல் அணியில் நான்கு வீரர்களைத் தக்கவைத்து (Retain) கொள்ள ஏலத்தின் விதிப்படி அனுமதிக்கப்பட்டது. மேலும், ஒரு வீரரை ‘ரைட் டு மேட்ச்’ (ஆர்டிஎம்) என்ற அட்டையைப் பயன்படுத்தி திரும்ப வாங்கலாம். இந்த விதி ஒரு அணியில் மொத்தம் ஐந்து வீரர்களை தக்கவைத்து கொள்ளும் வாய்ப்பை ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டது, இதில்  அதிகபட்சமாக ஒரு ஐபிர்கள் அணிகள் இரண்டு வெளிநாட்டு வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம்.

தற்போது, இதில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று சில ஐபிஎல் அணிகள் பிசிசிஐயிடம் வேண்டுகோள் விடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அது என்ன மாற்றம் என்றால் ஒரு அணியில் ஐந்து வீரர்களை தக்க வைத்து கொள்ள முடியும் என்ற நிலை மாறி ஒரு அணியில்  8 வீரர்களை தக்க வைத்து கொள்ளலாம் என்ற நிலை வர வேண்டும் என்பது தான். நடைபெற்று கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் அனைத்து அணிகளிலும் இளம் வீரர்களின் ஆதிக்கம் நன்றாகவே செயல்பட்டு வருகிறது.

இதனால் அடுத்த ஐபிஎல் தொடரிலும் அந்த வீரர்களை தக்க வைப்பதற்காக இந்த தீர்மானத்தை செய்ய வேண்டும் என்று ஐபிஎல் அணிகள் பிசிசிஐக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது என்று தகவல்கள் தெரிந்துள்ளது. இதனால் அடுத்த வருட ஐபிஎல் தொடருக்கு நடைபெற இருக்கும் ஏலத்தில் என்னென்ன மாற்றங்களை கொண்டு வரும் என்பதை பிசிசிஐ அதிகார பூர்வமாக அறிவித்தால் தான் தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

விஜய்யை நெருங்கிய தொண்டர் தலையில் துப்பாக்கி வைத்த பாதுகாவலர்.!

மதுரை : வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு ஐந்து நாட்களாக கொடைக்கானலில் நடைபெற்று வந்தது.…

18 minutes ago

பஹல்காம் தாக்குதல் : 2வது முறையாக பாகிஸ்தான் ஏவுகணை சோதனை.!

இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 24 அன்று பிரதமர் நரேந்திர மோடி, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்களும், அவர்களை…

45 minutes ago

ஜெலன்ஸ்கியை பின்னுக்குத் தள்ளி மாலத்தீவு அதிபர் சாதனை.! அப்படி என்ன தெரியுமா?

மாலத்தீவு : உலக பத்திரிகை சுதந்திர தினத்தில் மாலத்தீவு அதிபர் முகம்மது முய்ஸு 14 மணி நேரம் 54 நிமிடங்கள்…

2 hours ago

பஹல்காம் தாக்குதல்: இந்தியாவுக்கு முழு ஆதரவு.., பிரதமர் மோடியிடம் ரஷ்ய அதிபர் உறுதி.!

மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று (திங்கள்கிழமை) பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கடந்த மாதம்…

2 hours ago

“அங்க புக் வச்சி எழுதுறான்.., மூக்குத்தியில் பிட் கொண்டு போக முடியுமா?” – சீமான் ஆவேசம்!

சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…

4 hours ago

“இதெல்லாம் வரலாறு காணாத அத்துமீறல்!” பிரஸ்மீட்டில் சீரிய மா.சுப்பிரமணியன்!

சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…

5 hours ago