ரோஹித் சர்மாவுக்கும் எனக்கும் எந்த பிரச்னையும் இல்லை – சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த கோலி!

Published by
பாலா கலியமூர்த்தி

தென்னாபிரிக்கா தொடரை கோலி புறக்கணிக்க உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில் விளக்கமளித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுபயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதற்காக விராட் கோலி தலைமையிலான டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டியிருந்த நிலையில், ஒருநாள் தொடரில் கோலி பங்கேற்கமாட்டார் என இணையத்தில் தகவல் வெளியாகின.

ஒருநாள் போட்டிக்கு ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்ட நிலையில், தென்னாபிரிக்கா தொடரின்போது ஓய்வு எடுப்பதன் மூலம் கோலி தவறான நேரத்தில் தவறான முடிவை எடுத்து குழப்பத்தை ஏற்படுத்துகிறார் என முன்னாள் கேப்டன் உள்ளிட்ட பலர் கருத்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் தற்போது சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய விராட் கோலி, ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாட தயாராக உள்ளேன். ஓய்வு எடுக்க ஒருபோதும் நான் விரும்பியது இல்லை. ரோஹித் சர்மா தலைமையில் தென்னாப்ரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவேன் என தென்னாபிரிக்கா தொடரை கோலி புறக்கணிக்க உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில் விளக்கமளித்துள்ளார்.

ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளின் கேப்டன் தொடரின் கேப்டன் பொறுப்பில் இருந்து நான் விடுவிக்கப்பட்டதாக தேர்வுக்குழுவினர் கூறினர். ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. இதையே 2 ஆண்டுகளாக கூறி வருகிறேன். மறுபடியும் அதையே கேள்வியாக எழுப்புவது சோர்வை அளிக்கிறது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மாவின் திறனை மிஸ் செய்வோம். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அணித்தேர்வு குறித்து ஆலோசிக்கப்ட்ட பின்பு, ஒருநாள் அணிக்கு நான் கேப்டன் இல்லை என தேர்வுக்குழு தலைவர் என்னிடம் கூறினார்.

டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து விலக வேண்டாம் என விராட் கோலியிடம் சவுரவ் கங்குலி தெரிவித்திருந்த நிலையில், அப்படி யாரும் என்னிடம் என விராட் கோலி தெரிவித்தாக கூறப்படுகிறது. கேப்டனாக இல்லாமல் அணி வீரராக தயார் என ஏற்கனவே தேர்வுக்குழுவிடம் கூறிவிட்டேன்.

வதந்திகள் யார் பரப்புகிறார்களோ அவர்களிடம் கேளுங்கள் என ஒருநாள் கிரிக்கெட் அணி கேப்டனாக நீடிக்க கோலி விரும்பவில்லை என கங்குலி கூறிய நிலையில், விளக்கமளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

UAE கோல்டன் விசா: இந்தியர்களுக்கு வாழ்நாள் முழுவதும் குடும்பத்துடன் வாழ அரிய வாய்ப்பு!

UAE கோல்டன் விசா: இந்தியர்களுக்கு வாழ்நாள் முழுவதும் குடும்பத்துடன் வாழ அரிய வாய்ப்பு!

எமிரேட்சு : ஐக்கிய அரபு அமீரகம் (UAE) இந்தியர்களுக்கு கோல்டன் விசா திட்டத்தை ஏற்கனவே இருந்ததை விட இப்போது கொஞ்சம்…

20 minutes ago

கடலூர் விபத்து : “மக்கள் கொடுத்த அழுத்தத்தால் கேட்டை கீப்பர் திறந்திருக்கிறார்”..அன்பழகன் பேச்சு!

கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8,…

48 minutes ago

கடலூர் விபத்து : “கேட் திறந்து தான் இருந்தது” பள்ளி வேன் ஓட்டுநர் கொடுத்த வாக்குமூலம்!

கடலூர்: மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025) காலை கிருஷ்ணசாமி பள்ளியின் வேன் மீது விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயில்…

1 hour ago

கடலூர் ரயில் விபத்து : அக்கா, தம்பி உயிரிழந்த பரிதாபம்!

கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025) காலை ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள்…

2 hours ago

மீத்தேன் கண்காணிப்பு செயற்கைக் கோள் திடீர் மாயம்! நடந்தது என்ன?

பூமியை வெப்பமயமாக்கும் மீத்தேன் வாயு வெளியேற்றத்தைக் கண்காணிக்க அனுப்பப்பட்ட 88 மில்லியன் டாலர் மதிப்புள்ள மீத்தேன்SAT செயற்கைக் கோள், கடந்த…

3 hours ago

கடலூர் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து! காரணம் இது தான் ரயில்வே துறை விளக்கம்!

கடலூர் : செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025)…

4 hours ago