காயம் காரணமாக இந்திய அணியின் ரோஹித் சர்மா இடம்பெறாத நிலையில், தற்பொழுது அவர் டெஸ்ட் தொடரில் விளையாடுவார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
ஐபிஎல் தொடர், நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில், இதனைதொடர்ந்து கோலி தலைமையிலான இந்திய அணி, ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, டெஸ்ட், ஒருநாள், டி-20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்த தொடரில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியலை பிசிசிஐ ஏற்கனவே வெளியிட்டுள்ளது.
இதில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக பங்கேற்ற இளம் வீரர்கள் அதிகளவில் இடம்பெற்றுள்ளனர். ஆயினும், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோஹித் சர்மா அணியின் இடம்பெறாதது, ரசிகர்களிடையே பெருமளவில் ஏமாற்றத்தை அளித்தது. இந்தநிலையில் ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணியின் டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மாவை தேர்வு செய்துள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
மேலும், காயம் காரணமாக வருண் சக்ரவர்த்தி விலகிய நிலையில், அவருக்கு பதிலாக தமிழகத்தை சேர்ந்த யாக்கர் மன்னன் T.நடராஜன் அணியில் இடம்பெற்றார். அதுமட்டுமின்றி, விராட் கோலி, முதல் டெஸ்ட் போட்டிக்கு பின் இந்தியா திரும்பவுள்ளதாகவும் அவருக்கு பதிலாக ரோஹித் சர்மா விளையாடுவார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…
இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…
புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…