உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி , நியூஸிலாந்து அணியுடன் அரையிறுதி போட்டியில் தோல்விடைந்து வெளியேறியது.அதன் பிறகு அணியில் பிரச்சனை உள்ளதாக கூறப்பட்டது. உலகக்கோப்பை தொடரில் கேப்டன் கோலி ரோஹித் ஷர்மாவின் கருத்துக்களை கேட்கவில்லை எனவும் அதனால் இந்திய அணி இரண்டு குரூப்பாக பிரிந்ததாக கூறப்பட்டது.
மேலும் குறுகிய ஓவர் போட்டிகளில் கேப்டன் கோலி நீக்கிவிட்டு ரோஹித் ஷர்மாவை நியமிப்பதாக தகவல் வெளியானது.ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் விளையாட உள்ள அனைத்து போட்டிகளுக்கும் கோலி கேப்டன் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் விராட் கோலி சமீபத்தில் அளித்த பேட்டியில் எனக்கும் ,ரோஹித் ஷர்மாவிற்கும் எந்தவிதமான பிரச்சனை இல்லை எனவும் இப்படி சொல்லுபவர்களுக்கு என்ன லாபம் வரப்போகிறது என்று தெரியவில்லை என கூறினார்.
வெஸ்ட் இண்டீஸ் அணி உடன் விளையாட உள்ள தொடருக்காக இந்திய அணி மியாமி செல்லும் முன் கோலி ஒரு புகைப்படத்தை எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.அந்த புகைப்படத்தில் ரோஹித் ஷர்மா இல்லை இதனால் ரசிகர்கள் ரோஹித் ஷர்மா எங்கே ?அப்போது உங்களுக்குள் இருக்கும் பிரச்சனை உண்மைதான் என கருத்துக்கள் பதிவு செய்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் விராட் கோலி ஒரு புகைப்படத்தை பதிவிட்டார்.அந்த புகைப்படத்தில் ரோஹித் ஷர்மா இல்லை அதனால் மீண்டும் ரசிகர்கள் ரோஹித் ஷர்மா எங்கே ? கேட்க தொடக்கி உள்ளனர்.
அதே சமயத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு புகைப்படத்தை வெளியிடுள்ளார்.அதில் ரோஹித் ஷர்மா, புவனேஷ்வர் குமார், ஷிகர் தவான் , ரிஷாப் பந்த் ஆகியோர் இருந்தனர்.ஆனால் அதில் விராட் கோலி இல்லை இதனால் இந்திய அணியில் பிளவு இருப்பது உண்மை என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…
இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…
புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…