பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில், முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 9 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக இறுதி கட்டத்தை எட்டி வரும் நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இன்றைய 43-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணி, பெங்களூர் அணி விளையாடி வருகிறது. துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி தொடக்க வீரர்களான எவின் லூயிஸ், யஷஸ்வி ஜெய்ஸ்வால் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். ஜெய்ஸ்வால் 31 ரன்களில் ஆட்டமிழக்க, அதிரடியாக விளையாடி வந்த லூயிஸ் 37 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார்.
இதனைத்தொடர்ந்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 19 ரன்கள் எடுத்த நிலையில், ஷாபாஸ் அகமது பந்தில் வெளியேறினார். இதன்பின் வந்த வீரர்கள் பெங்களூரு பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தது. தொடக்கம் சிறப்பாக இருந்தாலும், அடுத்த வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
இறுதியாக ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 150 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி களமிறங்கியுள்ளது. பெங்களூரு அணி சார்பில் ஹர்ஷல் படேல் 3, சாஹல், ஷாபாஸ் அகமது தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…