#RRvRCB: எவின் லூயிஸ் அதிரடியான அரைசதம்.. 150 ரன்கள் எடுத்தால் பெங்களூரு வெற்றி!

Published by
பாலா கலியமூர்த்தி

பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில், முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 9 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக இறுதி கட்டத்தை எட்டி வரும் நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இன்றைய 43-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணி, பெங்களூர் அணி விளையாடி வருகிறது. துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி தொடக்க வீரர்களான எவின் லூயிஸ், யஷஸ்வி ஜெய்ஸ்வால் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். ஜெய்ஸ்வால் 31 ரன்களில் ஆட்டமிழக்க, அதிரடியாக விளையாடி வந்த லூயிஸ் 37 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார்.

இதனைத்தொடர்ந்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 19 ரன்கள் எடுத்த நிலையில், ஷாபாஸ் அகமது பந்தில் வெளியேறினார். இதன்பின் வந்த வீரர்கள் பெங்களூரு பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தது. தொடக்கம் சிறப்பாக இருந்தாலும், அடுத்த வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

இறுதியாக ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 150 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி களமிறங்கியுள்ளது. பெங்களூரு அணி சார்பில் ஹர்ஷல் படேல் 3, சாஹல், ஷாபாஸ் அகமது தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…

2 hours ago

டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…

2 hours ago

”இந்தியா தொட போகும் புதிய உச்சம்” கானா நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை.!

கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…

2 hours ago

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…

4 hours ago

ஓசூரில் அதிர்ச்சி: 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை.., உறவினர்கள் போராட்டம்.!

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…

4 hours ago

மக்களை திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களை வெளியிட பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை.!

டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…

5 hours ago