Conway Rutu fiftyIPL [Image-Twitter/@IPL]
ஐபிஎல் தொடரின் இன்றைய DC vs CSK போட்டியில் முதலில் பேட் செய்த சென்னை அணி அதிரடியாக விளையாடி 223/3 ரன்கள் குவிப்பு.
ஐபிஎல் தொடரின் இறுதிக்கட்ட போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் பிளேஆப் சுற்றுக்கு நுழைவதற்கு 6 அணிகள் இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் இன்று டெல்லியின் அருண் ஜெட்லீ ஸ்டேடியத்தில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட் செய்ய தீர்மானித்தது.
இதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணியில், தொடக்க வீரர்களான ருதுராஜ் மற்றும் கான்வே இருவரும் சிறப்பான தொடக்கம் அமைத்து கொடுத்தனர். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய இருவரும் அடுத்தடுத்து அரைசதம் கடந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த ருதுராஜ் 7 சிக்ஸர் மற்றும் 3 போர்களுடன் 79 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இதையடுத்து பேட் செய்ய வந்த டுபே தனது அதிரடியால் சிக்ஸர்களை அடித்து பறக்கவிட்டார், அவர் 9 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். அவரையடுத்து கான்வே 87 ரன்கள்(11 போர்கள், 3 சிக்ஸர்) எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் களமிறங்கிய தோனி- ஜடேஜா ஜோடி அதிரடி காட்ட சென்னை அணி 20 ஓவர்களில் 223/3 ரன்கள் குவித்துள்ளது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…