சாதனையை சமன் செய்த கிங்கோலிக்கு வித்தியாசமாக வாழ்த்து தெரிவித்த சச்சின்..!

Published by
murugan

நடப்பு உலகக்கோப்பை ஒருநாள் போட்டியில் 36 லீக் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 326 ரன்கள் குவித்தது. கடைசிவரை களத்தில் கோலி 101* ரன்களுடனும் , ஜடேஜா 29 ரன்களுடனும் இருந்தனர்.

327 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி 27.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 83 ரன்கள் எடுத்து 243 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியில் ஜடேஜா 5 விக்கெட்டையும் ஷமி, குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டையும், சிராஜ் 1 விக்கெட்டை வீழ்த்தினர். இந்த வெற்றி மூலம் நடப்பு உலக்கோப்பையில் விளையாடிய 8 போட்டியிலும் வெற்றி பெற்று 16 புள்ளிகளுடன் முதல் இடத்தை தக்க வைத்துள்ளது.

இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற அதிரடி வீரர் கிங் கோலி முக்கிய பங்கு உள்ளது. அதே நேரத்தில் இன்றைய போட்டி கோலி வாழ்க்கையில் மறக்க முடியதாக போட்டியாக அமைந்துள்ளது. காரணம் இந்தியாவின் ரன் மெஷின் என்று கூறப்படும்  விராட் கோலி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தனது ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையில் 49-வது சதத்தை அடித்தார். இதனால் ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை கோலி சமன் செய்துள்ளார். இன்றைய போட்டியில் 49-வது ஓவரில் ரபாடா வீசிய மூன்றாவது பந்தில் ஒரு ரன் எடுத்து டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்தார். இந்த சாதனையை கோலி தனது 35-வது பிறந்தநாளில் செய்துள்ளார்.

சச்சின் தனது ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையில் 463 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் 452 இன்னிங்ஸ்களில் 18426 ரன்கள் எடுத்தார். அதில் 49 சதங்களும், 96 அரை சதங்களும் அடித்துள்ளார். விராட் தனது ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையில் 288 போட்டிகளில் விளையாடி 277-வது இன்னிங்சில் 18426 ரன்கள் அடித்துள்ளார். அதில் 49 சதங்களும், 70 அரை சதங்களும் அடித்துள்ளார்.

இந்நிலையில், சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் அதிக சதங்களை விளாசியவர் என்ற தன்னுடைய சாதனையை சமன் செய்த விராட் கோலிக்கு சச்சின் வாழ்த்து தெரிவித்தார். அவர் எக்ஸ் ட்விட்டரில், “விராட் நீங்கள் நன்றாக விளையாடினீர்கள். 49 இல் இருந்து 50 அடைவதற்கு (வயதை கூறினார்) எனக்கு 365 நாட்கள் ஆனது. அடுத்த சில நாட்களில் நீங்கள் 49-ல் இருந்து 50-ஐ எட்டி எனது சாதனையை முறியடிப்பீர்கள் என்று நம்புகிறேன் வாழ்த்துக்கள்.” என தெரிவித்துள்ளார்.

Published by
murugan

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

52 minutes ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

1 hour ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

1 hour ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

3 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

3 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

5 hours ago