ஒரே ஒரு முறை சச்சின் கண்ணீர் விட்டு அழுதார்.! – நினைவுகளை பகிர்ந்த கங்குலி.!

Published by
மணிகண்டன்

வெஸ்ட் இண்டீஸ் அணி டெஸ்ட் தொடரில் 1-0 என்கிற கணக்கில் வெற்றி பெற்றது. இந்த தோல்வி சமயத்தில் ஓய்வு அறையில் சச்சின் கண்ணீர் விட்டு அழுதார் – சவ்ரவ் கங்குலி பகிர்ந்த நினைவலைகள்.

கிரிக்கெட் உலகின் கடவுள், மாஸ்டர் பிளாஸ்டர் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். இவர், நல்ல பேட்ஸ்மேனாக ஜொலித்தாலும், நல்ல கேப்டனாக சோபிக்கவில்லை.

இவர், சச்சின் தலைமையில் 1996-97-ல் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸிற்கு சுற்று பயணம் மேற்கொண்டது. அங்கு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. அந்த காலகட்டத்தில் தான், முன்னாள் கேப்டன் சவ்ரவ் கங்குலி புதிய வீரராக அணியில் களமிறங்கியிருந்தார்.

முன்னாள் கேப்டன் சவ்ரவ் கங்குலி சச்சின் குறித்து சச்சின் பற்றிய தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

அவர் கூறுகையில்,’ வெஸ்ட் இண்டீஸ் அணியுடணான அந்த தொடரில் 4 போட்டிகள் டிராவில் முடிவடைந்தது. ஒரு பொட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிகொண்டது. இதனால், அந்த அணி 1-0 என்கிற கணக்கில் வெற்றி பெற்றது. இந்த தோல்வி சமயத்தில் ஓய்வு அறையில் சச்சின் கண்ணீர் விட்டு அழுதார். அந்த ஒரு முறை தான் சச்சின் அழுதார். ‘ என நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

மேலும், சச்சின் தன்னிடம், ‘ நீ அணியில் நீடிக்க வேண்டுமென்றால் தினமும் காலையில் எழுந்து ஓட வேண்டும்.’ என கூறியதாக முன்னாள் கேப்டன் சவ்ரவ் கங்குலி குறிப்பிட்டார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

ராமதாஸுக்கு போட்டியாக நாளை நிர்வாகக் குழு கூட்டத்தை நடத்தும் அன்புமணி!

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

46 minutes ago

கூட்டத்தை பார்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜுரம் வரலாம் – எடப்பாடி பழனிசாமி சாடல்!

கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…

2 hours ago

லக்கி பாஸ்கர் 2 நிச்சயம் வரும்… உறுதி கொடுத்த இயக்குநர் வெங்கி அட்லூரி!

ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…

2 hours ago

முருகன் கோயில் குடமுழுக்கு..”என்னை அனுமதிக்கவில்லை”… செல்வப்பெருந்தகை வேதனை!

காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…

3 hours ago

பூனையை பார்த்துக்கோங்க என்னோட சொத்து உங்களுக்கு…ஆஃபர் கொடுத்த சீனா தாத்தா!

குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…

3 hours ago

அங்கன்வாடி மையங்கள் மூடலா? விளக்கம் கொடுத்த அமைச்சர் கீதா ஜீவன்!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியாகி அந்த செய்தி தீயை போல மிகவும்…

4 hours ago