ஒரே வீரர் .. ஒரே அணி ..!! 100 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர்கள் யார் யார் தெரியுமா ?

Published by
அகில் R

IPL 2024 : ஐபிஎல் தொடரில் ஒரு அணிக்காக 100 போட்டிகளில் விளையாடிய வீரர்களின் பட்டியலை பற்றி தான் இதில் பார்க்க போகிறோம்.

ஐபிஎல் தொடரில் தொடக்கம் முதலே ஒரே அணியில் இடம்பெற்று விளையாடி வருவது என்பது ஒரு சாதாரணமாக கடந்து போகும் விஷயம் இல்லை, அப்படி விளையாடினாலும் எதிர்பாராத விதமாக வேறு அணியில் இடம் பெரும் சந்தர்ப்ப சூழ்நிலை அமைந்து விடும். மேலும், ஒரே அணியில் இடம் பெற்று அந்த அணிக்காக 100 போட்டிகளை கடந்து பல வீரர்கள் விளையாடி கொண்டு வருகின்றனர்.

ஆனால், ஒரு வீரராக முதன் முதலில் இடம்பெற்ற அணிக்காக 100 போட்டிகளை விளையாடிய வீரர்களின் பட்டியலை பற்றி தான் பார்க்க போகிறோம். சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், ராஜஸ்தான், மும்பை, டெல்லி, கொல்கத்தா, பஞ்சாப் என 8 அணிகள் ஐபிஎல் தொடர் தொடங்கியது முதல் தற்போது வரை விளையாடி வருகிறது.

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 2008 -ல் இடம் பெற்று 2020 வரை விளையாடிய சுரேஷ் ரெய்னா சிஎஸ்கே அணிக்காக 100 போட்டிகளை விளையாடிய முதல் வீரர் ஆவார். அதே போல பெங்களூரு அணிக்காக விராட் கோலி முதன் முதலில் 100-வது ஐபிஎல் போட்டிகளை விளையாடினார். மேலும், பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக இதுவரை எந்த ஒரு வீரரும் தனது 100-வது போட்டியை பதிவு செய்ததில்லை எனபது குறிப்பிடத்தக்கது.

ஒரு அணிக்காக 100 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய முதல் வீரர்கள் :

  • சென்னை சூப்பர் கிங்ஸ் – சுரேஷ் ரெய்னா
  • மும்பை இந்தியன்ஸ் – ஹர்பஜன் சிங்
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – விராட் கோலி
  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – கவுதம் கம்பிர்
  • ராஜஸ்தான் ராயல்ஸ் – அஜின்கயா ரஹானே
  • சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் – புவனேஸ்வர் குமார்
  • டெல்லி கேபிட்டல்ஸ் – ரிஷப் பண்ட்
Published by
அகில் R

Recent Posts

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…

46 minutes ago

டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…

51 minutes ago

”இந்தியா தொட போகும் புதிய உச்சம்” கானா நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை.!

கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…

1 hour ago

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…

3 hours ago

ஓசூரில் அதிர்ச்சி: 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை.., உறவினர்கள் போராட்டம்.!

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…

3 hours ago

மக்களை திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களை வெளியிட பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை.!

டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…

4 hours ago