ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சன், அனைத்து விதமான கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் லெஜெண்டாக இருந்தவர், ஷேன் வாட்சன். இவர் இதுவரை 59 டெஸ்ட், 190 ஒருநாள் மற்றும் 58 டி-20 போட்டிகளில் விளையாடினார். அதனைதொடர்ந்து 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மேலும், 2008 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக கோப்பையை கைப்பற்ற பெரும் பலமாக இருந்தார்.
அதன்பின் வாட்சன், கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.அவரின் சிறப்பான ஆட்டம் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனி இடம்படைத்தார். அதிலும் குறிப்பாக, 2019-ல் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் ஷேன் வாட்சனின் காலில் காயம் ஏற்பட்டு, ரத்தம் வழிந்தது. இதனை பார்த்த ரசிகர்கள், அவர் போட்டியில் இருந்து விலகப்போவதாக எதிர்பார்த்த நிலையில், காயத்தையும் பொருட்படுத்தாமல் சிறப்பாக ஆடிவந்தார்.
அப்படிப்பட்ட சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்திய ஷேன் வாட்சன், நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடவில்லை. மேலும், அவர் ஓய்வு பெறப்போவதாக தகவல்கள் வர தொடங்கிய நிலையில், தற்பொழுது அதிகாரப்பூர்வமாக வாட்சன் தனது ஓய்வினை அறிவித்துள்ளார். காயத்துடன் ஆடிய சிங்கத்திற்கு பலரும் கண்ணீருடன் #WatsonRetires என்ற ஹாஸ்டாகில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் வியான் முல்டர், 334 பந்துகளில் 367* ரன்கள் குவித்து,…
மதுரை : மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி (NTK) ஏற்பாடு செய்த “ஆடு-மாடுகளின் மாநாட்டில்” கட்சித் தலைவர் செந்தமிழன் சீமான்,…
வாஷிங்டன் : எலான் மஸ்க்கின் xAI நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட Grok என்ற செயற்கை நுண்ணறிவு (AI) சாட்பாட், X தளத்தில்…
லண்டன் : இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது விறு விறுப்பாக…
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் பேசுகையில் " எடப்பாடி பழனிசாமி ‘தமிழகத்தை மீட்போம்’ என்று ஒரு பயணத்தைத்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் தனக்கு படுகொலை மிரட்டல் விடுத்ததை உறுதிப்படுத்தி, அதைப்…