ஆக்சிஜன் செறிவூட்டி கருவியை நன்கொடையாக வழங்கினார் ஷிகர் தவான்..!!

Published by
பால முருகன்

ஆக்சிஜன் பற்றாக்குறை அதிகரித்து வரும் நிலையில், ஷிகர் தவான் ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை குருகிராம் காவல்துறையினரிடம் நன்கொடையாக வழங்கியுள்ளார். 

உலகம் முழுவதும் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வரும் நிலையில், கொரோனா பரவல் அதிகமுள்ள மாநிலங்களில் கட்டுப்பாட்டுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் ஆக்ஸிஜன், ரெம்டெசிவிர் மருந்துக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆக்ஸிஜன் உள்ளிட்ட மருத்துவ உதவிகள் கிடைக்காமல் மக்கள் அவதி பட்டு வருகிறார்கள்.

இதற்காக கிரிக்கெட் வீரர்கள் பலர் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள் அந்த வகையில், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான் ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை குருகிராம் காவல்துறையினரிடம் நன்கொடையாக வழங்கியுள்ளார்.

இதற்கு முன்பு ஷிகர் தவான் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டபோது ரூ.20 லட்சம் நன்கொடை வழங்கினார். அதுமட்டுமின்றி நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ஆட்ட நாயகன் விருதுகள் உள்ளிட்டதன் மூலம் கிடைத்த தொகைகளையும் கொரோனா நிவாரணத்துக்கு நன்கொடையாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

ஈரானில் நடந்த தாக்குதலில் 5 இந்திய மாணவர்கள் காயம்.!

ஈரானில் நடந்த தாக்குதலில் 5 இந்திய மாணவர்கள் காயம்.!

ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…

35 minutes ago

போர் எப்போது.? ”நான் என்ன செய்யப் போகிறேன் என்று யாருக்கும் தெரியாது” – டிரம்ப் சூசக பதில்.!

அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக…

37 minutes ago

தமிழகம் முழுவதும் ஜூலை 9ம் தேதி டாஸ்மாக் வேலை நிறுத்தம் – டாஸ்மாக் பணியாளர் சங்கம்.!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…

1 hour ago

“கீழடி.., பாஜகவின் புராணக் கதைகள் அல்ல” – விஜய் கடும் விமர்சனம்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…

3 hours ago

“இது என்னுடைய நேரம்.., நான் என்னை மாற்றிக் கொள்ளவில்லை” – நடிகர் அஜித்குமார்.!

சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…

3 hours ago

டாஸ்மாக் வழக்கு: ”அமலாக்கத்துறை ஆவணங்கள் போதுமானது அல்ல” – ஐகோர்ட் அதிரடி உத்தரவு.!

சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…

3 hours ago