2-வது இன்னிங்ஸில் சுப்மன் கில் காயம் காரணமாக தொடக்க வீரராக களமிறங்கவில்லை என பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்தியா – நியூஸிலாந்து இடையே 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் இறங்கிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 325 ரன்கள் எடுத்தனர். நியூசிலாந்து வீரர் அஜாஸ் பட்டேல் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை படைத்தார்.
இதைத்தொடர்ந்து, தனது முதல் இன்னிங்ஸில் தொடங்கிய நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டை இழந்து 62 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இந்திய அணியில் அஸ்வின் 4, சிராஜ் 3, அக்சர் படேல் 2, ஜெயண்ட் யாதவ் 1 விக்கெட்டை பறித்தனர்.
இதனால், 263 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி தனது 2-வது இன்னிங்க்ஸை தொடங்கியது. 2-ஆம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி விக்கெட்டை இழக்காமல் 332 ரன்கள் முன்னிலையுடன் உள்ளது. களத்தில் மயங்க் அகர்வால் 38*, புஜாரா 29* ரன்களுடன் உள்ளனர். இந்நிலையில், 2-வது இன்னிங்ஸில் தொடக்க வீரராக சுப்மன் கில் களமிறங்கவில்லை.
இதுகுறித்து சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் கேள்வி எழுப்ப பிசிசிஐ தனது ட்விட்டரில் பதிவிட்ட பதிவில், முதல் இன்னிங்ஸில் ஃபீல்டிங் செய்யும் போது சுப்மன் கில் வலது முழங்கையில் காயம் ஏற்பட்டது. அவர் முழுமையாக குணமடையவில்லை. எனவே சுப்மன் கில் களம் இறங்கவில்லை என தெரிவித்துள்ளது.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…