இலங்கை அணி 19.4 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 133 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றனர்.
இந்தியா, இலங்கை இடையிலான 2-வது டி20 போட்டி இன்று ஆர்.பிரமதாச ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச முடிவு செய்தனர்.
முதலில் இறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 132 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதனால், 133 ரன்கள் இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக அவிஷ்கா பெர்னாண்டோ, மினோட் பானுகா இருவரும் களமிறங்கினர். 3 வது ஓவரில் அவிஷ்கா புவனேஷ்வர் குமார் வீசிய பந்தை ராகுல் சஹாரிடம் கேட்சை கொடுத்து வெளியேறினார்.
பின்னர், களமிறங்கிய சதீரா சமரவிக்ரமா 8, தசுன் ஷானகா 3 ரன் எடுத்து நடையை காட்டினர். நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மினோட் பானுகா 36 ரன்னில் ராகுல் சஹாரிடம் கேட்சை கொடுத்தார். அடுத்து இறங்கிய வாணிந்து ஹசரங்கா 15 , ரமேஷ் மெண்டிஸ் 2 ரன் எடுக்க தனஞ்சய டி சில்வா கடைசிவரை சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெற செய்தார்.
இறுதியாக இலங்கை அணி 19.4 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 133 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றனர். களத்தில் தனஞ்சய டி சில்வா 40 * ரன்களுடன் இருந்தார். இந்திய அணியில் குல்தீப் யாதவ் 2, புவனேஷ்வர் குமார், ராகுல் சஹார், சேதன் சாகரியா, வருண் சக்ரவர்த்தி தலா ஒரு விக்கெட்டை பறித்தனர். நடந்து முடிந்த 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா 1 போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமமாக உள்ளனர்.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…