சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா, தான் மஞ்சள் நிற ஜெர்சி அணிந்து மைதானத்திற்குள் செல்ல ஆசைப்படுவதாக கூறியுள்ளார்.
15-வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி வருகின்றனர். மும்பை வான்கனடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதலில் சென்னை அணி பேட்டிங் செய்து வருகிறது. இந்நிலையில், சென்னை – கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான இந்த போட்டி தொடங்கும் முன்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா, வர்ணனையாளராக ரசிகர்கள் முன் காட்சியளித்தார்.
அவரை கண்டதும் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும், மஞ்சள் நிற ஜெர்சியில் தங்களை மிஸ் செய்வதாகவும், உங்களை இப்படி பாப்போம் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை எனக்கூறி, ரசிகர்கள் நெகிழ்ச்சி அடைத்தனர். அதனைதொடர்ந்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் பேட்டியளித்த ரெய்னா, இந்நிகழ்ச்சிக்கு வரும் முன்னதாக மைதானத்தை கடந்து வரும்பொழுது, தான் மஞ்சள் நிற ஜெர்சி அணிந்து மைதானத்திற்குள் செல்ல ஆசைப்படுவதாக கூறியுள்ளார். ரெய்னாவின் இந்த பேச்சு, சென்னை ரசிகர்களை கண் கலங்க வைத்துள்ளது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் இருந்து சுரேஷ் ரெய்னா விடுக்கப்பட்டுள்ள நிலையில், ஏலத்தின்போது அவரை எடுக்க எந்த அணியும் முன்வரவில்லை. இதன் காரணமாக அவர் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை.
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…