ஒருநாள் உலகக்கோப்பை முடிந்த பிறகு இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் நாளை தொடங்குகிறது. இந்த தொடரில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அணியின் கேப்டன் பதவி சூர்யகுமார் யாதவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கேப்டனாக சூர்யகுமார் யாதவ் எந்தளவுக்கு வெற்றி பெறுவார் என்பதும் சுவாரஸ்யமாக இருக்கும்.
அதே நேரத்தில் பேட்டிங்கில் பாபர் ஆசம், முகமது ரிஸ்வான் மற்றும் விராட் கோலி ஆகியோரின் சாதனையை முறியடிக்க சூர்யாவுக்கு இந்த டி20 தொடர் இருக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரின் 5 போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் 159 ரன்கள் எடுத்தால் சர்வதேச டி20 போட்டிகளில் அதிவேகமாக 2000 ஆயிரம் ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையை படைக்கமுடியும்.
சாதனையை முறியடிப்பாரா சூர்யகுமார் யாதவ்:
இந்த டி20 தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் 159 ரன்கள் எடுத்தால் 52 இன்னிங்ஸ்களில் 2000 ஆயிரம் ரன்களைக் கடந்த பாபர் ஆசம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் சாதனையை சூர்யகுமார் யாதவ் சமன் செய்வார். அப்படிஇல்லையென்றால் 5 போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் 159 ரன்கள் எடுத்தால் டி20 போட்டிகளில் அதிவேகமாக 2000 ரன்களைக் கடந்த இந்திய வீரர் என்ற விராட் கோலியின் சாதனையை முறியடிப்பார்.
சர்வதேச டி20 போட்டிகளில் 2000 ரன்களை கடக்க விராட் கோலி 56 போட்டிகளில் விளையாடியுள்ளார். 33 வயதான சூர்யகுமார் யாதவ் 50 போட்டிகளில் விளையாடி 1841 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 3 சதங்கள் மற்றும் 15 அரைசதங்கள் அடங்கும்.
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…
டெல்லி : நேற்றைய தினம் மழையால் ஆர்சிபி-க்கு எதிரான போட்டி கைவிடப்பட்ட நிலையில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி பிளே…
ஹைதராபாத் : ஹைதராபாத்தின் சார்மினார் அருகே உள்ள குல்சார் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. திடீரென தீ விபத்து ஏற்பட்டதால்,…
டெல்லி : விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, சுரேஷ் ரெய்னா விராட் கோலி குறித்து…
ஆந்திரா : PSLV C-61 ராக்கெட் மூலமாக அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தும் முயற்சி…