பிசிசிஐ-யின் கோரிக்கையை ஏற்று இந்திய அணிக்கு வழிகாட்டியாக செயல்பட உள்ள எம்எஸ் தோனிக்கு, சவுரவ் கங்குலி நன்றி.
பிசிசிஐ-யின் கோரிக்கையை ஏற்று டி20 உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு வழிகாட்டியாக செயல்பட உள்ள எம்எஸ் தோனிக்கு நன்றி என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி தெரிவித்ததாக பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பதில் பதிவிட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17ம் தேதி தொடங்கும் டி-20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி வீரர்களை நேற்று பிசிசிஐ அறிவித்தது. இத்துடன் முன்னாள் இந்திய அணியின் கேப்டன் எம்எஸ் தோனி உலகக்கோப்பையில் வழிகாட்டியாக செயல்படுவர் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்திருந்தார்.
இந்திய அணிக்கு தோனி ஆலோசகராக நியமிக்கப்பட்டது குறித்து பேசிய பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, நான் துபாயில் இருந்தபோது எம்எஸ் தோனியிடம், டி20 உலகக் கோப்பைக்கு இந்திய அணியின் ஆலோசகராக வருமாறு தோனியிடம் நான் கேட்டேன். தோனியும் இதற்கு ஒப்புக்கொண்டார்.
இந்த தொடர்பாக நான் பிசிசிஐ-யின் மற்ற அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். கேப்டன் விராட் கோலி, துணைக் கேப்டன் ரோஹித் சர்மா, தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி என அனைவரிடமும் கருத்துக்களைக் கேட்டேன். அவர்கள் அனைவரும் இதற்கு ஆதரவு தெரிவித்து சம்மதம் தெரிவித்தனர்.
இதனால்தான் விரைவாக இந்த முடிவுக்கு வர முடிந்தது எனத் தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்பிற்கு தோனியின் ரசிகர்கள் மட்டுமல்லாமல், அனைத்து கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் ஜாம்பவான்கள் என பலரும் பிசிசிஐ-யின் முக்கிய முடிவை வரவேற்று வருகின்றனர் என்பது குறிப்பித்தக்கது.
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் நடந்த சம்பவத்தில், கோவில் தற்காலிக ஊழியரான அஜித்குமார்…
நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட "ஸ்க்விட் கேம் சீசன் 3" வெளியாகியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த இந்த…
சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால் நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…