தென்னாப்பிரிக்கா- இந்தியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி வாண்டரர்ஸ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.
தென்னாபிரிக்கா சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில்,3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.இதில் முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.கடந்த டிசம்பர் 26-ஆம் தேதி தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 117 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த நிலையில்,தென்னாப்பிரிக்கா- இந்தியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி வாண்டரர்ஸ் மைதானத்தில் இன்று மதியம் இந்திய நேரப்படி 1.30 மணிக்கு தொடங்குகிறது.3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ள தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற வெற்றி முனைப்புடன் இந்திய அணி களமிறங்கவுள்ளது.
அதே சமயம்,சொந்த மண்ணில் தோல்வியை தழுவக் கூடாது என்ற முனைப்பில் தென்னாப்பிரிக்கா அணியினர் தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டுள்ளனர்.
சாத்தியமான இந்திய லெவன் அணி:கேஎல் ராகுல்,மயங்க் அகர்வால், சேதேஷ்வர் புஜாரா,விராட் கோலி (கேப்டன்),அஜிங்க்யா ரஹானே,ரிஷப் பந்த்,ரவிச்சந்திரன் அஷ்வின்,ஷர்துல் தாக்கூர்,முகமது ஷமி,ஜஸ்பிரித் பும்ரா,முகமது சிராஜ்.
சாத்தியமான தென்னாப்பிரிக்கா லெவன் அணி: டீன் எல்கர்,ஐடன் மார்க்ரம்,கீகன் பீட்டர்சன்,ராஸ்ஸி வான் டெர் டுசென்,டெம்பா பவுமா,கைல் வெர்ரேய்ன்,மார்கோ ஜான்சன்,ககிசோ ரபாடா,கேசவ் மகாராஜ்,லுங்கி என்கிடி,டுவான் ஆலிவியர்.
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…