ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி தொடக்க வீரரான டேவிட் வார்னர் 61ரன்கள் எடுத்தார். பின்னர் மத்தியில் களமிறங்கிய மார்னஸ் 74 ரன்கள் குவித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற நேற்றைய ஆட்ட முடிவில் 52.1 ஓவரில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 179 ரன்கள் எடுத்தது.ஆர்ச்சர் 6 விக்கெட்டை பறித்தார்.
இன்று தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி ஆடும் தொடக்கத்திலேயே விக்கெட்டை இழந்து தடுமாறியது. பின்னர் களமிறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேற இங்கிலாந்து அணி 27.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 67 ரன்கள் மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜோ டென்லி 12 ரன்கள் குவித்தார்.
இதற்கு முன்பு 1948-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 58 ரன்கள் எடுத்து இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அதன் பின்னர் தற்போது குறைந்த ரன்னில் அனைத்து விக்கெட்டையும் இழந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். ஆறு பேர்…
அமெரிக்கா : ட்விட்டர் (எக்ஸ்) இணை நிறுவனர் மற்றும் பிளாக்செயின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி, முற்றிலும் ஆஃப்லைனில்…
நியூ மெக்சிகோ : அமெரிக்காவின் டெக்சாஸைத் தொடர்ந்து அதன் அண்டை மாகாணமான நியூ மெக்சிகோவியிலும் கனமழை புரட்டிப் போட்டுள்ளது. நியூ…
கடலூர் : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் நேற்றைய தினம் காலை 7:15 மணியளவில், செம்மங்குப்பம் ரயில்வே கேட் அருகே திருச்சி-சென்னை…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1,…
திருவாரூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.…