இந்திய கிரிக்கெட் வீரர்கள் கிருஷ்ணப்பா கவுதம் மற்றும் சாஹலுக்கு கொரோன உறுதி ..!

Published by
Edison

இலங்கை சென்றுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்கள் கிருஷ்ணப்பா கவுதம் மற்றும் சாஹலுக்கு கொரோன உறுதி செய்யப்பட்டுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடியது.இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இந்திய அணி 2 -1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

இதைத்தொடர்ந்து,நடைபெற்ற டி20 போட்டியில்,இந்திய அணி 1 -2 என்ற கணக்கில்,இலங்கையிடம் தோற்றது.இதற்கிடையில்,இரண்டாவது டி -20 போட்டியின்போது,கிருனால் பாண்டியாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில்,அவருடன் இருந்த 8 வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில்,எட்டு வீரர்களின் குழுவில் இருந்த,மூத்த லெக்ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் ஸ்பின்-பந்துவீச்சு ஆல்ரவுண்டர் கே கவுதம் இருவரும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால்,கிருனலுடன் சாஹல் மற்றும் கவுதம் ஆகியோர் மீண்டும் கொழும்பில் தங்கியிருக்க வேண்டியிருக்கும்.மேலும்,பரிசோதனையில் கொரோனா நெகடிவ் என வந்த மற்ற ஆறு வீரர்களான கிருனலின் சகோதரர் ஹார்டிக், பிருத்வி ஷா, சூர்யகுமார் யாதவ், மனிஷ் பாண்டே, தீபக் சாஹர் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் இன்று இந்தியா திரும்புவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.எனினும்,மீதமுள்ள இந்திய அணி குழு இந்தியாவுக்குத் திரும்புவது உறுதி.

இலங்கை அரசின் வழிகாட்டுதல்களின்படி,கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட எவரும் குறைந்தது பத்து நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும், பின்னர் புதிய சோதனைகளை முடித்து நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Edison

Recent Posts

மாணவர்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தி.., தடுத்து நிறுத்திய காவல்துறை..!

மாணவர்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தி.., தடுத்து நிறுத்திய காவல்துறை..!

பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…

52 minutes ago

உச்சநீதிமன்ற அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய குடியரசுத் தலைவர்.., முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!

டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…

1 hour ago

இந்தியா பயப்படாது…அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு பதிலடி தான்” அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!

ஸ்ரீநகர் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…

2 hours ago

“அவர் பொறுப்பாக நடந்திருக்க வேண்டும்”- பாஜக அமைச்சருக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்.!

டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…

2 hours ago

உதகை மலர் கண்காட்சி தொடக்கம்: மலர் சிம்மாசனத்தில் அமர்ந்த முதல்வர் ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…

3 hours ago

காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்..குழந்தைகள் உள்பட 84 பேர் பலி!

காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…

3 hours ago