kagiso rabada and Marco Jansen [file image]
டி20 உலகக்கோப்பையை 2024 : சூப்பர் 8 சுற்று போட்டியில் B- பிரிவின் கடைசி போட்டி இன்று நடைபெற்ற நிலையில், இந்த போட்டியில் வெஸ்ட் இண்டிஸ் அணியும், தென்னாபிரிக்கா அணியும் அன்டிகுவாவில் உள்ள விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில், தான். அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
அது என்னவென்றால், இரண்டு வீரர்கள் பந்தை தடுக்கும்போது எதிர் எதிரே மோதிக்கொண்டனர். இந்த போட்டியின் இன்னிங்ஸின் 8-வது ஓவரை மார்க்ரம் வீச வந்தார். கைல் மேயர்ஸ் அந்த பந்தை எதிர்கொண்டபோது ஓவரின் 5-வது பந்தில் மேயர்ஸ் அபாரமான ஷாட் அடித்தார்.
பந்து உயரத்துடன் சிக்ஸர் செல்ல முயன்றது. அப்போது ககிசோ ரபாடாவும், மார்கோ ஜான்சனும் பந்தை தடுக்க முயன்றார்கள். அப்போது தான், இருவரும் எதிர்பாராத விதமாக மோதிக்கொண்டனர். உடனே பிசியோ வந்து அவர்களுக்கு முதலுதவி செய்தார். இந்த எதிர்பாராத சம்பவத்தில் பலத்த காயம் அடைந்த ரபாடா சிறு காயங்களுடன் தப்பினார்.
மார்கோ ஜான்சனுக்கு வயிற்று பகுதியில் வலி மிகவும் எடுத்ததால் மைதானத்தில் வலியால் துடித்தார். தடுக்க முயன்ற அந்த பந்தும் சிக்சருக்கு சென்றது. இது தொடர்பான அதிர்ச்சி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும், இந்த போட்டியில் வெற்றி பெரும் அணி அரை இறுதிக்கு தகுதி பெறும் என்பதால் போட்டி மிகப்பெரிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருந்தது. போட்டியில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா அணி, பந்து வீச்சை தேர்வு செய்து வெஸ்ட் இண்டீஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 135 ரன்களை மட்டுமே எடுத்தது.
சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…
சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…
சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…
மதுரை : சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள…
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…