கிரிக்கெட்

இந்த இரண்டு அணிகளும் அரையிறுதிக்கு தகுதி பெறும்-சேவாக்..!

Published by
Dinasuvadu Web

2023 ஐசிசி உலகக்கோப்பை நாளை தொடங்க உள்ள நிலையில்,  இந்திய அணியின் முன்னாள்  தொடக்க வீரர் வீரேந்திர சேவாக் இந்த இரு அணிகள் தான் அரையிறுதிக்கு முன்னேறும் என்று கிரிக்பஸ்க்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கும்  ஒருநாள் உலகக்கோப்பை 2023 நாளை தொடங்கவுள்ளது. இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நாளை முதல் போட்டியில் மோத உள்ளன. இந்நிலையில், வீரேந்திர சேவாக் கிரிக்பஸ்க்கு அளித்த பேட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் அரையிறுதிக்கு தகுதி பெறும் என்று  தெரிவித்துள்ளார்.

மேலும், அரையிறுதிக்கு ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடம்பெறும் என்றார். சமீப காலமாக ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்து சிறப்பாக விளையாடி வருகிறது. உலகக்கோப்பை இந்தியாவில் நடைபெறவில்லை என்றால் அரையிறுதிக்கு இந்தியா, பாகிஸ்தான் என்று இரு அணியை தேர்ந்தடுத்திருக்க மாட்டேன். ஒரே ஒரு அணியைத் தேர்ந்தெடுத்திருப்பேன் என தெரிவித்தார்.

உலகக் கோப்பையை வெல்லும் திறன் கொண்ட வலுவான அணியை இந்தியா கொண்டுள்ளது என்றும், 2011 ஆம் ஆண்டு மூத்த வீரர் சச்சின் டெண்டுல்கருக்காக உலகக்கோப்பையை இந்திய அணி வென்றது. தற்போது அணியில் மூத்த வீரர்களாக உள்ள ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலிக்கும் அதையே இந்திய அணி செய்ய வேண்டும் என்று கூறினார். சச்சின் டெண்டுல்கருக்கு கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை இறுதி உலககோப்பையாக இருந்தது.

 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் சச்சினுடன் சேர்ந்து சக வீரர்களும் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஹர்திக் பாண்டியா 10 ஓவர்கள் வீச முடியாவிட்டால் ஆடும் லெவனில் மற்றொரு பந்து வீச்சாளரைக் கருத்தில் கொள்ள வேண்டும். ஆடும் லெவனில் சூர்யகுமாரை விட இஷான் கிஷனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் எனவும், ஏனெனில் இஷான்கிஷன் தான் சரியான வீரர் என்றார். மேலும் ராகுலை ஐந்தாவது இடத்தில், ஹர்திக் பாண்டியாவை ஆறாவது இடத்தில் விளையாடலாம் என கூறினார்.

இந்திய அணி தங்கள் முதல் உலகக்கோப்பை போட்டியை வரும் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் ஆஸ்திரேலியா அணியுடன் மோதவுள்ளது.

 

Published by
Dinasuvadu Web

Recent Posts

பாக். ராணுவம் பதில் தாக்குதல்., இந்திய எல்லைக்குள் 13 பேர் உயிரிழப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…

13 minutes ago

“31 பேர் பலி., பழி வாங்குவோம்! இந்திய ராணுவத்தை தாக்குவோம்!” பாகிஸ்தான் சபதம்!

இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…

51 minutes ago

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

9 hours ago

சென்னையில் நாளையும் போர்க்கால ஒத்திகை…, எதெல்லாம் துண்டிக்கப்படும்.?

சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…

10 hours ago

CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

11 hours ago

ரசிகர்கள் ஷாக்: டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ரோஹித் சர்மா.!

மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…

12 hours ago