நேற்றையை போட்டியில் தோல்வியடைந்ததை தொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயர் இந்த தோல்வி நிச்சயமாக எங்களுக்கு ஒரு பெரிய தோல்வி என்று கூறியுள்ளார்.
நேற்று ஐபிஎல் தொடரின் 47 வது லீக் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் – ஹைதராபாத் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன் படி முதலில் ஹைதராபாத் அணி பேட்டிங் செய்தது
தொடக்கத்திலே அதிரடியாக விளையாடிய ஹைதராபாத் அணி , 20 ஓவர் முடிவில் 2 விக்கெட்களை இழப்பிற்கு 219 ரன்களை டெல்லிக்கு இலக்காக வைத்தது. அடுத்ததாக களமிறங்கிய டெல்லி அணி 19 ஓவர் முடிவில் 131 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்து. இதனால் 88 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இந்த தோல்வியை குறித்து போட்டி முடிவடைந்தவுடன் ஸ்ரேயாஸ் ஐயர் கூறியது, இந்த தோல்வி நிச்சயமாக எங்களுக்கு ஒரு பெரிய தோல்வி. எங்கள் அணிக்கு அதிகம் ரன்ரேட்கள் தேவைபடுகிறது. எங்களுக்கு இப்போது இரண்டு போட்டிகள் உள்ளன, நாங்கள் ஒரு போட்டியில் வெல்ல வேண்டும்.
தொடர்ந்து எங்கள் அணி தோல்வியை சந்தித்து வருகிறது. அடுத்த வரும் போட்டிகளில் நங்கள் வலிமையாக வருவோம். இந்த போட்டியை நாங்கள் பவர் பிளேயிலேயே இழந்தோம். என்றும் கூறியுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், 269 ரன்கள் குவித்து சாதனை படைத்ததை…
சென்னை : நடிகர் விஜய், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி அறிமுகமாகும் ‘ஃபீனிக்ஸ்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியைப்…
வாஷிங்டன் : அமெரிக்க நாடாளுமன்றத்தில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு 500% வரி விதிக்கும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
ஐரோப்பா : குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர்யுனைடெட் ரேபிட் & பிளிட்ஸ் 2025 போட்டியின்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 05-07-2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…