ஐபிஎல் 2024 : இதுதான் மஞ்சள் படையின் பவர்! சிஎஸ்கே போட்டிக்கு கூடுதல் ரயில் இயக்கம் ..!

Published by
அகில் R

ஐபிஎல் 2024 : சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வருகிற ஏப்ரல்-8ம் தேதி நடைபெறும் சென்னை-கொல்கத்தா போட்டிக்கு சென்னையில் உள்ள சிந்தாதிரி முதல் வேளச்சேரி வரை கூடுதலாக ரயில்களை இயக்க திட்டம்.

ஐபிஎல் தொடரில் அதிக எதிர்பார்ப்புகள் நிறைந்த போட்டியாக காணப்படுது சென்னை அணியின் போட்டியாகும். அப்படிப்பட்ட சென்னை அணியின் போட்டிகளுக்கு ரசிகர்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் முன்கூட்டியே டிக்கெட்டுகள் நேரில் விற்கப்படாது என சென்னை நிர்வாகம் இந்த ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் முன்பே அறிவித்திருந்தது.

அதன் படி இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை நடைபெற்ற அனைத்து சென்னை அணி போட்டிகளுக்கும் டிக்கெட் ஆனது ஆன்லைனில் தான் பெறப்பட்டது. இந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணி மூன்று போட்டிகளில் விளையாடி உள்ளது, அதில் முதல் இரண்டு போட்டிகள் சேப்பாக்கத்தில் நடைபெற்றது. அந்த சேப்பாக்கத்தில் நடைபெற்ற இரண்டு போட்டியிலும் சென்னை அணி அபாரமாக வெற்றியை பெற்றது.

அதை தொடர்ந்து 3-வது போட்டியில் டெல்லியிடம் தோல்வியை தழுவிய சென்னை அணி தற்போது, ஹைத்ராபாத்தில் தனது 4-வது போட்டிக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில், ஐபிஎல் தொடரின் 22-வது போட்டியாக வருகிற ஏப்ரல் -8 ம் தேதி சென்னை அணி சேப்பாக்கத்தில் கொல்கத்தா அணியை சந்திக்க உள்ளது.

இரண்டு போட்டிகளுக்கு பிறகு மீண்டும்  போட்டிகள் சேப்பாக்கத்தில் நடைபெறுவதால் ரசிகர்கள் கூட்டம் அலை மோதும் என்பதற்காக சிந்தாதிரி முதல் வேளச்சேரி வரை கூடுதலாக ரயில்கள் விட அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதிலும், சென்னை அணியின் ரசிகர் கூட்டம் கூடும் என்பதையும், நாடளுமன்ற தேர்தல் ப்ரச்சாரங்கள் ஆங்காங்கே நடைபெறுவதாலும் கூடுதலாக ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

Recent Posts

ஈரானில் நடந்த தாக்குதலில் 5 இந்திய மாணவர்கள் காயம்.!

ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…

1 hour ago

போர் எப்போது.? ”நான் என்ன செய்யப் போகிறேன் என்று யாருக்கும் தெரியாது” – டிரம்ப் சூசக பதில்.!

அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக…

2 hours ago

தமிழகம் முழுவதும் ஜூலை 9ம் தேதி டாஸ்மாக் வேலை நிறுத்தம் – டாஸ்மாக் பணியாளர் சங்கம்.!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…

2 hours ago

“கீழடி.., பாஜகவின் புராணக் கதைகள் அல்ல” – விஜய் கடும் விமர்சனம்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…

4 hours ago

“இது என்னுடைய நேரம்.., நான் என்னை மாற்றிக் கொள்ளவில்லை” – நடிகர் அஜித்குமார்.!

சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…

4 hours ago

டாஸ்மாக் வழக்கு: ”அமலாக்கத்துறை ஆவணங்கள் போதுமானது அல்ல” – ஐகோர்ட் அதிரடி உத்தரவு.!

சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…

4 hours ago