இதுனால தான் இவர் லெஜண்ட்! கடைசி நேரத்தில் ரோஹித் சர்மா செய்த மாயாஜால வேலை!

Published by
அகில் R

ஐபிஎல் 2024 : கடைசி ஓவரில் ரோஹித் சர்மா செட் செய்த ஃபீல்டால் தான் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது என்று ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர்.

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்து மும்பை அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி அதிரடியாக விளையாடி 20 அவர்கள் முடிவில் 192 ரன்கள் எடுத்தது.

அடுத்ததாக 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியில் தொடர்ச்சியாக அடுத்தடுத்து விக்கெட் விழுந்த காரணத்தினால் ஆரம்பத்தில் ரன்ஸ் எடுக்க சருக்கியது. அதன் பிறகு படிப்படியாக முன்னேறி வந்த நிலையில் கடைசி ஓவரில் 12 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் பஞ்சாப் அணி இருந்தது.

இதனால் கடைசி ஓவரில் மும்பை அணியின் ஆகாஷ் மத்வாள் பந்த வீச வந்தார். அப்போது மும்பை அணியின் முன்னாள் கேப்டனான ரோஹித் சர்மா களத்தில் நின்று கொண்டு ஃபில்டிங்கை செட் செய்தார். அதாவது அவர் முகமது நபியை கவர் திசையில் தூரத்தில் நிற்க வைத்துவிட்டு மற்ற வீரர்களை ஒவ்வொரு இடத்தில் நிற்க வைத்தார்.

அவர் நிக்க வைத்தது போல பேட்டிங் செய்த ரபடா பந்தை நபியிடம் அடித்து இரண்டு ரன்கள் ஓட முயற்சி செய்தார். அப்போது முகமது நபி அந்த பந்தை இஷான் கிஷனுக்கு த்ரோ செய்தார். பந்தை பிடித்த இஷான் கிஷன் அவரை ரன் அவுட் செய்துவிட்டார். லெஜண்ட் ரோஹித் சர்மா  செட் செய்த ஃபீல்டால் தான் இது நடந்தது என ரசிகர்கள் அனைவரும் அவரை புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.

மேலும் புள்ளிப்பட்டியில் 9-தாவது இடத்தில் இருந்த மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது இந்த பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 7-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Published by
அகில் R

Recent Posts

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…

6 hours ago

“நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்” – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…

7 hours ago

MI vs GT : குஜராத் அணியின் மிரட்டல் பவுலிங்.., திணறிய மும்பை.!! இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…

9 hours ago

ராஜஸ்தான்-பாக்., எல்லையில் போர் ஒத்திகை.., NOTAM எச்சரிக்கை கொடுத்த இந்தியா.!

டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…

9 hours ago

பலுசிஸ்தான் ஐஇடி குண்டுவெடிப்பில் 7 பாகிஸ்தான் வீரர்கள் பலி.!

பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…

10 hours ago

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்.., இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு.!

குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…

11 hours ago