Ricky Ponting [file image]
ரிக்கி பாண்டிங் : நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா அணி சார்பில் பெரிய தாக்கமாக ரிஷப் பண்ட் அமைவார் என ஆதரவாக ரிக்கி பாண்டிங் பேசி இருக்கிறார்.
ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டனும், நட்சத்திர வீரருமான ரிஷப் பண்ட் நடைபெற்று முடிந்த இந்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக இவர் சிறப்பாக விளையாடி இந்த ஐபிஎல் தொடரில் ஒரு சிறிய தாக்கத்தையும் ஏற்படுத்தி இருந்தார். இவர் 10 போட்டியில் விளையாடி 160.60 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் 371 ரன்கள் எடுத்திருந்தார்.
ஆனால், ஒரு அணியின் கேப்டனாக நன்றாக விளையாடினாலும் பிளே-ஆஃப் சுற்றில் அணியை கொண்டுவருவதற்கு முயற்சி செய்தும் அது முடியாமலே போனது. இந்நிலையில், அடுத்ததாக நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பைக்கும் இந்தியா அணியில் அவர் தேர்வு செய்ப்பற்றிருந்தார்.
தற்போது, இவர் தான் இந்த டி20யில் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று டெல்லி அணியின் பயிற்சியாளரும், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனுமான ரிக்கி பாண்டிங் ஐசிசிக்கு அளித்த ஒரு நேர்காணலில் கூறி இருந்தார். அவர் பேசுகையில், “இந்திய அணிக்காக ரிஷப் பண்ட் மீண்டும் விளையாட இருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.
அவருடன் பணிபுரிந்த ஒவ்வொரு தருணத்தையும் நான் அருகில் இருந்து ரசித்துள்ளேன். இது ஒரு சிறந்த கம்பேக், மேலும் அவர் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என நம்புகிறேன். உண்மையில் சொல்லப் போனால் அவரது பேட்டிங் பற்றி யாருக்கும் கவலையில்லை. ஏனெனில் அவர் எவ்வளவு நன்றாக ஆடுகிறார் என்பதும் அவரது பேட்டிங் திறன் என்ன என்பதும் அனைவருக்குமே தெரியும்”, என்று கூறி இருந்தார்.
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…
டெல்லி : மத்தியப் பிரதேச பழங்குடி அமைச்சர் குன்வர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை 'பயங்கரவாதிகளின் சகோதரி' என்று…
சென்னை : 10ஆம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15, 2025 வரை நடைபெற்றன. இந்த…
டெல்லி : உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு…
சென்னை : 2025 ஆம் ஆண்டு +2 (12ஆம் வகுப்பு) பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், தனியாக தேர்வு எழுதியவர்களுக்கும்…
வாஷிங்டன் : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம்…