Virat Kohli & Rohit Sharma [file image]
ZIMvIND : இந்திய அணி ஜிம்பாப்வே விளையாடிய பிறகு இளம் வீரர்களாகிய இவர்கள் தான் ரோஹித்-கோலி இடத்தை நிரப்ப போகிறார்கள் என்று கருத்து தெரிவித்து உள்ளார் முன்னாள் வீரர்.
கடந்த ஜூலை-6 முதல் ஜூலை-14 வரை ஜிம்பாப்வேயில் நடைபெற்ற 5 போட்டிகளை கொண்ட டி20 தொடரை இந்திய அணி 4-1 என அபாரமாக கைப்பற்றியது. கில் தலைமையிலான இளம் இந்திய அணி முதலில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணியிடம் படுதோல்வி அடைந்தனர். ஆனால், அதன்பிறகு நடைபெற்ற 4 போட்டிகளிலும் இந்திய அந்த வென்று தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்த தொடரில் நேற்று நடைபெற்ற 5-வது மற்றும் கடைசி டி20 போட்டியின் போது இந்திய அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றிருப்பார்கள். இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரான சபா கரீம் இந்திய அணியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் இடத்தை பிடிப்பதற்கு இனி சூப்மன் கில் மற்றும் ஜெய்ஸ்வால் இருக்கிறார்கள் என பேசி இருக்கிறார்.
இது குறித்து சபா கரீம் சோனி ஸ்போர்ட்ஸ்ஸில் பேசிய போது, “டி20 கிரிக்கெட் போட்டிகளில் தற்போது அதிரடியான விளையாட்டை இந்திய அணி முன்னோக்கி எடுத்துள்ளது. இது இந்திய அணிக்கும் தேர்வாளர்களுக்கும் ஒரு நல்ல செய்தி தான். முதல் டி20 போட்டியில் இந்தியா தோற்றாலும் அங்கிருந்து வலுவான கம்பேக் கொடுத்துள்ளது. ஜெய்ஸ்வால் மற்றும் கில் இருவரின் பார்ட்னர்ஷிப்பை பற்றியும், அவர்கள் இடது- வலது கை ஜோடியாக இருப்பதையும் நாம் அடிக்கடி பேசி கொண்டு தான் வருகிறோம்.
நம் இந்திய அணியில் தற்போது 2 இடங்கள் காலியாக உள்ளன. ரோகித், விராட் ஆகியோர் டி20 கிரிக்கெட்டில்இனி விளையாடப் போவதில்லை. எனவே கில்-ஜெய்ஸ்வால் அந்த இடத்திற்கு தயாராக இருப்பதாக நான் கருதுகிறேன். அதே போல இன்னும் சில வீரர்களும் தயாராக உள்ளனர். எனவே அவர்களில் சிறந்தவரை தேர்ந்தெடுத்து பயன்படுத்துவது தேர்வாளர்களின் கை யில் உள்ளது. இந்த இளம் இந்திய வீரர்கள் சீனியர் அணியை போலவே அதிரடியாக பேட்டிங் விளையாடி தொடரை வென்று காட்டியுள்ளனர்” என்று கூறி இருந்தார்.
அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…