இன்றைய போட்டியின் சுவாரஸ்யம்.. ஹைதராபாத் அணியை நம்பி 4 அணிகள்! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..

Published by
பாலா கலியமூர்த்தி

ஹைதராபாத் அணி வென்றால், சென்னை மற்றும் லக்னோ அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவது உறுதி.

நடப்பாண்டு 16- வது சீசன் ஐபிஎல் தொடர் மார்ச் 31-ஆம் தேதி தொடங்கிய நிலையில், தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 10 அணிகள் பங்கேற்றுள்ள ஐபிஎல் தொடரில் இதுவரை 64 லீக் போட்டிகள் நடந்துள்ளது. இதில், பெரும்பாலான அணிகளும் 13 போட்டிகளில் விளையாடி உள்ளது.

தற்போது வரை முதல் 4 இடங்களில் அதாவது ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவது யார் என மிகவும் கடுமையான போட்டி நிலவுகிறது. இதுபோன்று வேறு எந்த ஒரு ஐபிஎல் சீசனிலும் நடந்ததில்லை, இந்த சீசனில் அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இதனால், ப்ளே ஆஃப் சுற்றுக்கு இன்னும் வாய்ப்பு இருந்து வருகிறது. இருப்பினும், முதல் அணியாக 18 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்து, முதல் அணியாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது குஜராத் அணி.

புள்ளி பட்டியலில் 13 போட்டிகளில் முடிந்து 15 புள்ளிகளுடன் சென்னை இரண்டாவது இடத்திலும், 15 புள்ளிகளுடன் லக்னோ அணி மூன்றாவது இடத்திலும் உள்ளது. இயாதே சமயத்தில் 13 போட்டிகளில் விளையாடி உள்ள மும்பை அணி 14 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. இதன்பின் அடுத்தடுத்த இடங்களில், பெங்களூரு அணி 12 போட்டிகளில் விளையாடி 12 புள்ளிகளுடன் இருக்கிறது.

ராஜஸ்தான்,  கொல்கத்தா, பஞ்சாப் ஆகிய அணிகள் 13 போட்டிகளில் விளையாடி தலா 12 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடத்தில் போட்டிபோட்டு உள்ளனர். இதில், டெல்லிம் ஐதராபாத் அணிகள் கிட்டத்தட்ட வெளியேறிவிட்டதே என கூறலாம். இதனால், முதல் இடத்தை தவிர மற்ற இடங்களுக்கு 7 அணிகள் போட்டி போடுகிறது. இதன் காரணமாக புள்ளி பட்டியல் இன்னும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதில், சென்னை, லக்னோ அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவது கிட்டத்தட்ட உறுதி என்றும் கூறலாம். ஏனென்றால், இரு அணிகளும் தலா 15 புள்ளிகள் பெற்றுள்ளது. அவர்களுக்கு இன்னும் மீதம் ஒரு போட்டி உள்ளது. இதுபோன்று மும்பை அணி 14 புள்ளிகளுடன் உள்ளது. அடுத்து வரும் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது.

ஆனால், பெங்களூரு அணிக்கு இன்றுடன் சேர்த்து 2 போட்டிகள் உள்ளது. இதில் வெற்றி பெற்றால், மும்பை – பெங்களூர் இடையே கடும் போட்டி நிலவும். பின்னர் ரன் ரேட் அடிப்படையில் முடிவெடுக்கப்படும், இதெல்லாம் இரு அணிகளும் வெற்றி பெற்றால் மட்டுமே சாத்தியம்.  இந்த நிலையில், ப்ளே ஆஃப் சுற்றுக்கு யார் முன்னேறுவார்கள் என்ற பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரிட்சை நடத்துகிறது.

இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணி வென்றால், சென்னை மற்றும் லக்னோ அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவது உறுதியாகிவிடும். மேலும், மும்பை, ராஜஸ்தான், கொல்கத்தா, பஞ்சாப் அணிகளுக்கான ப்ளே ஆஃப் வாய்ப்பு சற்று அதிகரிக்கக் கூடும். எனவே, இன்றைய போட்டியில் அனைவரது கவனமும் உள்ளது. அதேபோல், ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

சூடு பிடிக்கும் அரசியல் களம்: ஒரே நாளில் 2வது முறையாக முதல்வர் ஸ்டாலினுடன் ஓபிஎஸ் சந்திப்பு.!

சென்னை : இன்று காலை தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறினார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிகார்பூர்வமாக அறிவித்தார். சமீபத்தில்,…

28 minutes ago

5-வது டெஸ்ட் போட்டி: தடுமாறும் இந்திய அணி.., ஜெய்ஸ்வால் – கே.எல்.ராகுல் சொற்ப ரன்களில் அவுட்.!

ஓவல் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதிப்…

45 minutes ago

ஆணவக் கொலை வழக்கு : ஆவணங்களை சிபிசிஐடியிடம் ஒப்படைத்தது காவல்துறை.!

நெல்லை : தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் (வயது…

1 hour ago

11 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் – தலைமைச் செயலாளர் உத்தரவு.!

சென்னை : தமிழகத்தில் 11 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த இடமாற்றம் உத்தரவை…

2 hours ago

5-வது டெஸ்ட் போட்டி.., டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு.!

ஓவல் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி…

3 hours ago

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தது குறித்து ஓபிஎஸ் ஓபன் டாக்.!

சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று காலை சென்னை அடையாறு…

3 hours ago