#image_title
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக லக்னோ அணியும், மும்பை அணியும் மோதுகிறது.
நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இன்றைய 48-வது போட்டியாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் இன்று இரவு 7.30 மணிக்கு லக்னோவில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாய் மைதானத்தில் வைத்து மோதுகிறது.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இனி வில்யடும் ஒவ்வொரு போட்டியும் மிகமுக்கியமான போட்டிகள் ஆகும். இந்த போட்டியிலும் இனி விளையாடும் போட்டிகளிலும் ஒரு போட்டியை தோற்றால் கூட நடையை கட்ட வேண்டியது தான். இதனால் மும்பை அணி லக்னோ அணியுடன் இன்றைய போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் விளையாடுவார்கள் என்று மும்பை அணி ரசிகர்களால் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும், மும்பை அணியின் முன்னாள் கேப்டனான ரோஹித் சர்மாவின் 37- வது பிறந்தநாளான இன்று பேட்டிங்கில் சிறப்பாக விளையாடுவர் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
நேருக்கு நேர்
இந்த இரு அணிகளும் நேருக்கு நேராக மொத்தம் 4 போட்டிகள் விளையாடி உள்ளனர். இதில் 3 முறை லக்னோ அணியும், 1 முறை மும்பை அணியும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்பதில் சந்தேகமில்லை.
எதிர்பார்க்கப்படும் வீரர்கள்
லக்னோ அணி
குயின்டன் டி காக், கே.எல். ராகுல்(கேப்டன்/விக்கெட் கீப்பர்), தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோனிஸ், நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் படோனி, க்ருனால் பாண்டியா, மாட் ஹென்றி, ரவி பிஷ்னோய், மொஹ்சின் கான், யாஷ் தாக்கூர்.
மும்பை அணி
ரோஹித் சர்மா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டிம் டேவிட், முகமது நபி, ரொமாரியோ ஷெப்பர்ட், ஷ்ரேயாஸ் கோபால், ஜெரால்ட் கோட்ஸி, ஜஸ்பிரித் பும்ரா, ஆகாஷ் மத்வால்.
சென்னை : நாய்கள் இனப்பெருக்க கட்டுப்பாடு பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த…
சென்னை : 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில், முதலமைச்சர்…
அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…