இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா ரூ.5 கோடி மதிப்பிலான இரண்டு கைக்கடிகாரங்களை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள்.
இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு துபாயில் இருந்து விமானம் மூலம் இந்தியா திரும்பினார். மும்பை விமான நிலையத்தில் இறங்கிய அவரை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.இதில் ஹர்திக் பாண்டியாவின் கையில் ஒரு கடிகாரம் கட்டப்பட்டும், பையில் ஒரு கைக்கடிகாரமும் இருந்துள்ளது.
இந்த இரண்டு கடிகாரமும் புதிய கைக்கடிகாரங்கள் என்றும், இவற்றின் மதிப்பு ரூ.5 கோடி என்றும் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து, சுங்கத்துறை அதிகாரிகள் இந்த இரண்டு கைக்கடிகாரங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். இந்த கடிகாரங்களை அவர் துபாயில் வாங்கிய நிலையில், அதற்கான ரசீது எதுவும் அவரிடம் இல்லை என்பதால் சுங்கத்துறை அதிகாரிகள் கைகடிகாரங்களை பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…