6 பந்துகளில் 6 சிக்ஸர் அடித்து ஜஸ்கரன் மிரட்டல் சாதனை…!

Published by
Edison

யுஎஸ்ஏவின் ஜஸ்கரன் மல்ஹோத்ரா ஒருநாள் போட்டியில் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் பாபுவா நியூ கினியா அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.அதன்படி, நடைபெற்ற முதல் போட்டியில் அமெரிக்க அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்நிலையில்,நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற பாபுவா நியூ கினியா பந்து வீச்சை தேர்வு செய்தது.அதன்படி,களமிறங்கிய அமேரிக்கா அணி இறுதியில் 9 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் எடுத்துள்ளது.

இப்போட்டியில்,6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடித்து ஜஸ்கரன் மல்ஹோத்ரா சாதனை படைத்துள்ளார்.இதனால்,தென்னாப்பிரிக்க வீரர் ஹெர்சல் கிப்ஸுக்குப் பிறகு ஒரு நாள் சர்வதேச போட்டியில் ஒரு ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடித்த இரண்டாவது பேட்ஸ்மேன் என்ற பெருமையை ஜஸ்கரன் பெற்றுள்ளார்.மேலும்,ஒருநாள் போட்டியில் சதம் அடித்த முதல் அமெரிக்க வீரர் என்ற பெருமையையும் மல்ஹோத்ரா பெற்றார்.

குறிப்பாக,இரண்டாவது ஒருநாள் போட்டியில் அவர் 124 பந்துகளில் 16 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 173 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

யார் இவர்?:

பஞ்சாப் மாநிலம் சண்டிகாரில் பிறந்த ஜஸ்கரன் மல்கோத்ரா, 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருந்தவர்.

எனினும்,இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல்,அமெரிக்கா சென்ற அவருக்கு,அமெரிக்காவின் தேசிய அணியில் இடம் கிடைத்தது. இதனையடுத்து,தற்போது அவர் அமெரிக்க அணிக்காக சிறப்பாக விளையாடி வருகிறார்.இந்த நிலையில், 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடித்த ஜஸ்கரனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Recent Posts

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

1 hour ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

2 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

3 hours ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

3 hours ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

4 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

5 hours ago