ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ராகுல் டிராவிட் ஒரு சரியான மனிதர் மற்றும் “தீவிரமாக கிரிக்கெட் விளையாடும் நல்ல வீரர்” என்றும் ஸ்மித் கூறியுள்ளார்.
உலகம் முழுவதும் கொரனோ வைரஸ் தாக்கம் நாளுக்கு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டுதான் செல்கிறது செல்கிறது, இதன் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்படுள்ள நிலையில் பலரும் வீட்டிலே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் படங்களின் படப்பிடிப்புகள் மற்றும் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, இந்த நிலையில் பல கிரிக்கெட் வீரர்கள் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களை உற்சாகபடுத்தி வருகிறார்கள்,மேலும் விரைவில் ஐபிஎல் போட்டியை நடித்த முடிவு எடுத்துள்ளதாவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் கலந்துரையாடல் செய்தார். அப்பொழுது ரசிகர்கள் சில கேள்விகள் அவரிடம் கேட்டு வந்தார்கள் அதில் முக்கியமாக நீங்கள் எதிர்கொண்டதில் கடினமான பந்துவீச்சாளர் யார் என்று கேட்டதற்கு, அவர் கூறியது பாகிஸ்தானின் முகமது ஆமீர் என்று பதிலளித்துள்ளார். நான் எதிர்கொண்டதிலேயே முகமது ஆமீர் தான் மிகைத்திறமையான பவுலர் என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில் அடுத்ததாக பாகிஸ்தான் அணியின் கிரிக்கெட் வீரர், பாபர் ஆசாம் பற்றி கூறியுள்ளார், அதில் ஸ்டீவ் ஸ்மித் கூறியது, பாபர் ஆசாம் “மிகவும் நல்ல வீரர், அவர் பேட்டிங் செய்யும்போது நிறைய நேரம் கடந்த பிறகு பேட்டிங்கில் கலக்குவார் என்றும் கூறியுள்ளார். ராகுல் டிராவிட் பற்றி கூறியதில் ராகுல் டிராவிட் ஒரு சரியான மனிதர் மற்றும் “தீவிரமாக கிரிக்கெட் விளையாடும் நல்ல வீரர்” என்றும் ஸ்மித் கூறியுள்ளார்.
நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, தனது அறிமுகப் படமான பீனிக்ஸ் படத்தின் விளம்பர வீடியோக்களை நீக்குமாறு மிரட்டியதாக எழுந்த…
கலிபோர்னியா : அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் ஜோஸ் நீதிமன்றம், ஆண்ட்ராய்டு ஃபோன் பயனர்களின் தகவல்களை அனுமதியின்றி திரட்டியதாக…
டெல்லி : மத்திய அரசு புதிய விதி ஒன்றை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, ஜூலை 1, 2025 முதல் புதிய பான்…
வாஷிங்டன் : அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய மசோதாவுக்கு எதிராக மக்கள் வாக்களிக்க…
இங்கிலாந்து : இந்திய கிரிக்கெட் அணியின் இளம் கேப்டன் சுப்மன் கில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் (ஜூலை 2, 2025)…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு…