விராட் கோலியே ஒழுங்கா ரன் எடுக்கல.. பாகிஸ்தானை குறை சொல்லாதீங்க! கடுப்பான பயிற்சியாளர்!

Published by
பால முருகன்

டி20 உலகக்கோப்பை : அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மகாணங்களில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து லீக் சுற்றிலேயே பாகிஸ்தான் அணி வெளியேறியுள்ள நிலையில், இது பற்றி அணியின் முன்னாள் கேப்டனும், பயிற்சியாளருமான ரஷீத் லத்தீப் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” உலகக்கோப்பை தொடரில் இருந்து பாகிஸ்தான் வெளியேறியது எங்களுக்கு சற்று வருத்தமாக தான் இருக்கிறது.

அதற்காக எல்லா விஷயங்களுக்கும் பாகிஸ்தான் வீரர்களைக் குறை கூற முடியாது. என்னை பொறுத்தவரை வீரர்கள் அனைவரும் நன்றாக தங்களால் முடிந்த அளவுக்கு போராடினார்கள்.ஆனால், விளையாடிய ஆடுகளத்தின் நிலைமைகளால் தான் தடுமாற்றம் ஏற்பட்டது. அமெரிக்கா மற்றும் இந்தியா இரண்டு அணிக்கு எதிராக பாகிஸ்தான் வெற்றி பெற்றிருக்க வேண்டும். போட்டியின் நிலை வேறு மாதிரி மாறிவிட்டது.

இது அனைத்திற்கும் காரணமே ஆடுகளத்தின் நிலைமை என்று மட்டும் தான் நான் கூறுவேன். விராட் கோலி  பெரிய அளவில் ரன்களை எடுக்கவில்லை. விராட் கோலி மட்டுமில்லை அவரை போன்ற ஒரு பேட்ஸ்மேன் கூட சரியாக ரன்களை எடுக்கவில்லை. அதைப்போல, இந்த உலகக்கோப்பையில் தனி நபர் அரை சதங்கள் அதிகம் இல்லை. ஆப்கானிஸ்தான் போன்ற அணிகளுக்கு எதிராக எந்த அணியும் அரை சதம் கூட அடிக்கவில்லை. ஒரு பேட்ஸ்மேன் அரை சதம் அடித்தால் அணி அடிக்கடி வெற்றி பெறுகிறது. ரிஷப் பந்த் 42 ரன்கள் எடுத்தார், இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தியது” எனவும் ரஷீத் லத்தீப் கூறியுள்ளார்.

ஏற்கனவே, இந்த சீசனில் விராட் கோலி இதுவரை சரியாக விளையாடவில்லை அவர் மிகவும் மோசமான பார்மில் இருக்கிறார் என விமர்சனங்கள் எழுந்துகொண்டு இருக்கும் சூழலில் ரஷீத் லத்தீப் விராட் கோலியே ஒழுங்கா விளையாடவில்லை என கூறியிருப்பது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Published by
பால முருகன்

Recent Posts

இஸ்ரேலும் ஈரானும் சின்ன பசங்க மாதிரி சண்டை போடுறாங்க! டொனால்ட் டிரம்ப் பேச்சு!

வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட  இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…

5 hours ago

எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…

5 hours ago

மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு! தமிழக அரசு உத்தரவு!

சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…

6 hours ago

ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…

6 hours ago

பாமக மோதல் : பொறுப்பை பறித்த அன்புமணி… “அவருக்கு அதிகாரமில்லை” டென்ஷனான அருள்!

பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…

7 hours ago

த.வெ.க தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் எப்போது சுற்றுப்பயணம்? ஆதவ் அர்ஜுனா முக்கிய தகவல்!

சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…

8 hours ago