‘நாங்கள் இவ்வளவு ரன்கள் இலக்காக வைப்போம் என்று நினைக்கவிலை ..’ – ஷ்ரேயஸ் ஐயர்

Published by
அகில் R

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணியின் கேப்டனான ஷ்ரேயஸ் ஐயர் போட்டி முடிந்த பிறகு வெற்றி குறித்து பேசி இருந்தார்.

நேற்று டெல்லி, கொல்கத்தா அணிகளிடையே நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் களமிறங்கி அதிரடி காட்டியது. அந்த அணியின் கூட்டு முயற்சியில், குறிப்பாக சுனில் நரேன் மற்றும் ரசல்லின் அதிரடியால் அந்த அணி 20 ஓவருக்கு 7 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் என்ற இமாலய இலக்கை டெல்லி அணிக்கு நிர்ணயித்தது.

அதனை தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 166 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இதனால் 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை கொல்கத்தா அணி பெற்றது. அந்த வெற்றிக்கு பிறகு அணியின் கேப்டனான ஷ்ரேயஸ் ஐயர் வெற்றி பெற்றதை குறித்து பேசி இருந்தார்.

அவர் பேசுகையில், “நாங்கள் தொடக்கத்தில் 210-220 ரன்களை இலக்காக தீர்மானித்து தான் விளையாடினோம் உண்மையில் நாங்கள் நிர்ணயித்த இந்த ஸ்கோர் எங்கள் எதிர்பார்ப்புகளை விட அதிகமாக இருந்தது. அதிலும், சுனில் நரேனின் பங்கு எங்களுக்கு ஒரு வலுவான தொடக்கத்தைக் கொடுத்தது. மேலும், இவரது இந்த ஆக்ரோஷமான விளையாட்டு எப்போதும் செயல்படவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால் இன்று, அவர் ஆரம்பம் முதலே முற்றிலும் பயமில்லாமல் விளையாடினார்.

அதிலும், அவரது விளையாட்டு பார்ப்பது ஒரு விருந்தாகும். அதன் பிறகு போட்டியில் எங்களுக்கு விக்கெட் தேவைபட்ட போது பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல் பட்டு விக்கெட்டுகள் எடுத்து ஆதிக்கம் செலுத்துவதை பார்க்க அருமையாக இருக்கிறது. குறிப்பாக வைபவ் அரோரா இந்த போட்டியில் முக்கியமான விக்கெட்டுகளை எடுத்து தனித்து நின்றார், அவர் உண்மையிலேயே அணிக்காக சிறப்பாக பந்து வீசினார். இதே போல வெற்றியை நாங்கள் மீண்டும் தொடருவோம்”, என்று போட்டி முடிந்த பிறகு வெற்றியை குறித்து ஷ்ரேயஸ் ஐயர் பேசி இருந்தார்.

Recent Posts

LSG vs SRH : பேட்டிங்கில் மிரட்டிய லக்னோ.., ஹைதராபாத்துக்கு இமாலய இலக்கு.!

லக்னோ : ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோ…

44 minutes ago

”விஷாலுடன் ஆகஸ்டு 29 ஆம் தேதி திருமணம்” – மேடையில் அறிவித்த சாய் தன்ஷிகா.!

சென்னை : யோகி டா பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், விஷால் - சாய் தன்ஷிகா…

1 hour ago

சாய் தன்ஷிகாவை கரம் பிடிக்கும் நடிகர் விஷால்.! மேடையில் போட்டுடைத்த இயக்குநர்.!

சென்னை : நடிகர் விஷால் நடிகை சாய் தன்ஷிகாவை ஆகஸ்ட் மாதத்தில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. விஷாலும்…

2 hours ago

தாக்குதலில் இந்தியாவின் விமானங்கள் எத்தனை சேதமடைந்தன? விக்ரம் மிஸ்ரி கூறியது என்ன?

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு திங்களன்று நடந்த இந்தியா-பாகிஸ்தான் இராணுவ மோதல் குறித்து வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி…

2 hours ago

LSG vs SRH : லக்னோவுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு.? ஹைதராபாத் அணி பந்துவீச்சு.!

லக்னோ : ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோவில்…

3 hours ago

“சாம்சங் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு”- முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு.!

சென்னை : அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் சாம்சங் தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.…

3 hours ago