Bengaluru team captain Faf du Plessis [Image Source : BCCI/Sportzpics]
ஒட்டுமொத்த அணியாக பார்க்கும்போது, நாங்கள் பிளே ஆஃப் செல்ல தகுதியற்றவர்களாக இருந்தோம் என ஃபாஃப் டூபிளெசில் ஓபன் டாக்.
நடப்பாண்டு 16-ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் இறுதி லீக் போட்டி நேற்று பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்றது, இப்போட்டியில், குஜராத் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின. ஏற்கனவே, பிளே ஆஃப் சுற்றுக்கு குஜராத் அணி தாக்கு பெற்றிருந்ததால், பெங்களூரு அணி இப்போட்டியில் வென்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தது.
இந்த சமயத்தில் முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி வீரர்கள் விராட் கோலியை தவிர வேறு யாரும் சொல்லும்படி சிறப்பாக செயல்படவில்லை. கோலி மட்டுமே ஒருபக்கம் நின்று சதத்தை விளாசினார். இதனால் பெங்களூரு அணி இறுதியில் 20 ஓவர் முடிவில் 197 ரன்களை எடுத்தது. பின்னர் களமிறங்கிய குஜராத் அணி சிறப்பாக விளையாடி 19.1 ஒவேரில் 198 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.
இதில், சுப்மன் கில் 104 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் காலத்தில் இருந்தார். குஜராத் அணி வெற்றியால் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது. மறுபக்கம் 16 புள்ளிகளுடன் காத்திருந்த மும்பை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது.
பெங்களூரு அணி தோல்வியை அடுத்து, ரசிகர்கள் பெறும் ஏமாற்றத்தையே மீண்டும் சந்தித்தனர். இந்த முறையாவது சாம்பியன் பதட்டத்தை தட்டி செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட பெங்களூரு அணியின் ரசிகர்களுக்கு மீண்டும் ஒருமுறை ஏமாற்றமே கிடைத்தது. இதனால் பல்வேறு விதமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இந்த சமயத்தில், பெங்களூரு அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் பேசிய கேப்டன் டு பிளெசிஸ், நடப்பு சீசனில் பெங்களூரு அணி சிறப்பான அணிகளில் ஒன்றாக இருக்கவில்லை என என்பதே எனது நேர்மையான கருத்து என தெரிவித்தார். மேலும், அணியில் சில வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள், ஆனால், ஒட்டுமொத்த அணியாக பார்க்கும்போது, பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல தகுதியற்றவர்களாகவே இருந்தோம் என கூறினார்.
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…
டெல்லி : பாகிஸ்தானுடனான எல்லையில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது, ஆனால் இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது. இந்த நிலையில், ராணுவ நடவடிக்கைகளுக்கான…
சென்னை : சமீபகாலமாக நடிகர் விஷாலுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருப்பது ஒரு சோகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், கடந்த ஜனவரி…
மதுரை : உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம், இன்று சிறப்பாக…
மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…