இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஆன்டிகுவாவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ய முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழந்து 203 ரன்கள் எடுத்திருந்தது.
தொடக்க வீரரான ராகுல் 44 ரன்களும் , மத்தியில் களமிறங்கிய ரஹானே 81 ரன்கள் குவித்ததன் மூலம் இந்திய அணியை சரிவில் இருந்து மீண்டது. பின்னர் நேற்று இரண்டாவது நாள் போட்டியில் விளையாடிய ஜடேஜா மற்றும் பண்ட் நிதான ஆட்டத்தால் இந்திய அணி 297 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
சிறப்பாக விளையாடிய ஜடேஜா 51 ரன்கள் குவித்தார்.இதைத் தொடர்ந்து நேற்று தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஆட்டம் கிரெய்க் பிராத்வைட் தொடக்கத்திலேயே 14 ரன்களுடன் வெளியேறினார்.பின்னர் மத்தியில் களமிறங்கிய ரோஸ்டன் சேஸ் 48 ரன்கள் குவித்தார்.
இதையெடுத்து ஷாய் ஹோப் , ஷிம்ரான் ஹெட்மியர் இருவரும் கைகோர்த்து அணியின் எண்ணிக்கையை சற்று உயர்த்தினர்.நிதானமாக விளையாடி வந்த ஷாய் ஹோப் 24 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.
பிறகு அடுத்தடுத்து ஷிம்ரான் ஹெட்மியர் 35 ரன்னில் அவுட் ஆக நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் இழந்து 189 ரன்கள் குவித்தது. இன்று மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கியது சிறப்பாக விளையாடிய ஜேசன் ஹோல்டர் 39 ரன்கள் குவித்தார்.
பின்னர் இறங்கிய மிகுவல் கம்மின்ஸ் ரன்கள் எடுக்காமல் வெளியேறினார். இறுதியாக வெஸ்ட் இண்டீஸ் அணி 74.2 ஓவரில் 222 ரன்கள் மட்டுமே அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இந்திய அணி சார்பில் இஷாந்த் சர்மா 5 விக்கெட்டையும் , ஷமி ,ஜடேஜா இருவரும் தலா இரண்டு விக்கெட்டை பறித்தனர். இந்நிலையில் இந்திய அணி 75 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை இந்திய அணி தொடங்கி உள்ளது.
மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…
செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…